தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..

ஹிந்து வாழ்க்கை முறைகளை குலைக்கும் வகையில் சட்டம் போடுவதை சாடும் பரமாச்சாரியார்…

Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். ‘மதச்சார்பில்லாதது’ என்று இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில் ஸர்க்கார் தலையிடலாமே தவிர, மத (religious) விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய மதத்திலே இப்படி மதம்-சமூகம் -வீடு-தனி மனுஷ்யன் என்று தனித்தனியாகப் பிரிக்காமல், எல்லாவற்றையும் சேர்த்துப் பின்னி integrate பண்ணி [ஒருங்கிணைத்து] அல்லவா வைத்திருக்கிறது? அதனால் சமூக விஷயம் என்று ஸர்க்கார் போடுகிற சட்டமும் மதத்தையே அல்லவா பாதிக்கிறது? இதை ஒப்புக்கொள்ளாமல் ‘இன்னின்ன விஷயங்களோடு மதம் முடிந்துவிடுகிறது; மற்றதெல்லாம் ராஜாங்கம் ஸம்பந்தப்பட்ட ஸமூஹ விஷயம்’ என்கிறார்கள்.

சரி, எல்லா மதத்திலுமே சில அம்சங்களிலாவது ஸமூஹ ஸமாசாரங்களும் வந்து விடுகிறதே, அவற்றின் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால்- இங்கே தான் ரொம்ப வேதனையாயிருக்கிறது. ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் எல்லா மதமும் ஸமம் என்று சொன்னாலும், சிறுபான்மை மதஸ்தர்கள் social reform சட்டங்களை ஆக்ஷேபித்து, “இது எங்கள் மதத்தில் சொன்னதற்கு விரோதமாயிருக்கிறது. இது குரானுக்கு விரோதம்;கிறிஸ்துவக் கோட்பாட்டுக்கு முரணானது” என்று சொன்னால் உடனே அந்த மதஸ்தர்கள் விஷயத்தில் இந்தச் சட்டங்களுக்கு விலக்கு தந்துவிடுகிறார்கள். இம்மாதிரிச் சிறுபான்மை மதஸ்தருக்கு மட்டும் குடும்பக்கட்டுப்பாடு போன்ற ஒன்றில் விலக்குத் தந்தால் எதிர்காலத்தில் அவர்களே பெரும்பான்மையாகி விடவும் இடமேற்படுகிறது. ஆனால் ‘ஸெக்யூலர் ஸ்டேட்’ டாக இருந்தும் ஹிந்து மத விஷயமாக மட்டும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. ‘மைனாரிட்டி ரிலிஜன்’காரர்கள் போல் நம்மிலே ஒரு சூடு பிறந்து ஆட்சேபிக்கிறவர்களே இல்லை. அப்படியே நாலு, பேர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பிற்போக்குக்காரர்கள், பத்தாம் பசலிகள் (obscurantist) என்று அவர்களுக்குப் பெயர் கொடுத்துவிட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

‘ஸெக்யூலர் ஸ்டேட்’ என்றால் மதச் சார்பில்லாதஸர்க்கார் என்றே அர்த்தம். மத விரோதமான என்று அர்த்தமில்லை. ஒரு மதம் மட்டுமின்றி எல்லா மதமுமே அபிவிருத்தியாவது ஸெக்யூலர் ஸ்டேட்டுக்கு ஸம்மதமானதுதான்’ என்றெல்லாம் பெரிசாகப் பிரஸங்கம் பண்ணுபவர்கள் பண்ணினாலும், பிரத்யக்ஷத்தில் ஹிந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு விரோதமில்லாத காரியங்களைப் பண்ணுவதுதான் இங்கே ஸெக்யூலர் ஸ்டேட் என்று நடந்து வருகிறது! தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது.

தெய்வத்தின் குரல்

ஹிந்து சட்ட மசோதா பற்றிய எச்சரிக்கை…

(1958 ல் வெளியான கட்டுரை)

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் மக்களவையில் ‘ஹிந்து சட்ட மசோதா’ (Hindu Code Bill) பற்றி விவாதம் நடந்தது என்பதை அனைவரும் அறிவர். மேலே குறிப்பிட்ட சட்டத்தின் சில பிரிவுகள், ஹிந்து சட்டத்தின் பரம்பரையான பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் முரணாக இருக்கின்ற காரணத்தால், சாதாரண மக்களுக்கிடையில் இதற்கு மிகத் தீவிரமான எதிர்ப்பு இருந்தது. இந்த ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள, தலைவர்கள், ஹிந்துக்களை கற்காலத்தவர் ஆக்கும் பொருட்டு, அதாவது ஹிந்துக்களை ஹிந்துக்கள் அல்லாதவர்களாக மாற்றி, தேசிய உணர்வு அற்றவர்களாக மாற்றும் தமது பிடிவாதத்தினால் ‘மசோதா’வை சட்டமாக மாற்றியே ஆகவேண்டும் என மிகத் தீவிரமான விருப்பம் உடையவர்களாக இருந்தனர். ஆனால் வரப்போகும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு தம் முயற்சியை விட்டுவிடுவதுதான் புத்திசாலித்தனமான செயல் என எண்ணினர்.

இந்த மசோதாவை திரும்பப் பெற்று, தமது உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பு அளித்துள்ளது என்று ஹிந்துக்களை நினைக்க வைத்தனர். விஞ்ஞானம் மற்றும் நிலையான கொள்கை, கோட்பாடுகள் என்ற அஸ்திவாரத்தின் மேல் அமைந்துள்ள நமது சமூக அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அபாயம் நீங்கிவிட்டது என்று மக்களும் மகிழ்ச்சி அடைந்து, மீண்டும் அதே தலைவர்களுக்கு வாக்களித்து அரியணையில் அமர்த்தினர். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களது கபட நாடகத்திற்கு வெற்றி முழக்கமாயிற்று. மக்களை ஏமாற்றி இத்திட்டத்தைத் தயாரித்து செயலாக்கிய மனிதர்கள், பாராட்டிற்குரியவர்கள்.

மேற்குநாட்டவரின் பக்தி

கடந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட அரசு, மக்களால் விரும்பப்படுவதையும், மரியாதையையும் இழந்தால் அன்றி ‘ஹிந்து சட்ட மசோதா’வை மீண்டும் கொண்டு வர இயலாது என அறிந்தது. ஆனால் அரசை நிர்வகிக்கும் தலைவர்கள், ஹிந்து சமூகத்தை முற்றிலும் மாற்றியே தீருவது என்ற உறுதி பூண்டவர்களாகத் தென்படுகின்றனர்.

இவர்களது செயல், பாரத மண்ணில் ஹிந்துக்கள், அதாவது பாரதத்தைச் சேர்ந்த, நாட்டிற்கேயுரிய சின்னமாக எதுவுமே மீதி இருக்கலாகாது என்பது போல் உள்ளது. இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. மேற்கத்திய நாகரிகத்திற்கு ஒத்த வகையில் மக்களை மாற்றியுள்ளோம் என்ற திருப்தி அடையலாம்.

அவ்வாறே, அந்நியர்கள் முன் நம் அடிமைத்தனமான விசுவாசத்தையும், உலகினர் அறியும்படி வெளிப்படுத்த இயலும். இந்த தாழ்வு மனப்பான்மையுடன்தான் அவர்கள் வேலை செய்து கொண்டு உள்ளனர்.

ஹிந்துக்கள் எவற்றை எல்லாம் உயர்ந்தது என்று கருதி வழிபட்டனரோ, எவை எல்லாம் மக்களின் ஈடுபாட்டிற்கு மையமாக இருந்தனவோ, அவற்றையெல்லாம் சிதைத்து விட்டோம், பாழடித்து விட்டோம் என்று மனமகிழ்ச்சி அடையலாம்.

மக்களுடைய கோபத்திற்கு இரையாகாமல் இந்த மசோதாவிற்கு ‘சட்ட’ வடிவை எப்படித்தரலாம் என்பதுதான் அவர்களுக்கு முன்னர் உள்ள பிரச்சனை. இந்தச் சிக்கலுக்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “மசோதாவை” சின்னஞ்சிறு பகுதிகளாக, பல தலைப்புகளின் கீழ் பிரித்துள்ளனர். இவ்வாறு மக்களின் கோபம் நிராகரிப்பு ஆகியவைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள, அதே “ஹிந்து கோட் பில்”, வேறு வடிவத்தில் நுழைக்கப்பட்டு வருகிறது. மெதுவாக இப்பகுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும்.

மக்கள் அறியாதவண்ணம் “மசோதா” முழுவதும் சட்டமாக்கப்பட்டு விடும். மக்களின் நம்பிக்கை மற்றும் ஈடுபாட்டினை அழிப்பதற்காக மெதுவாக செயல்படும் விஷத்தைத் தருவது போன்றதே இது.

பொது மக்களின் ஆதரவு இல்லை

இன்று லோக்சபாவின் முன் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை ஆகியவை சம்பந்தமான மசோதாக்கள் உள்ளன. அவை அனைத்தும் “ஹிந்து கோட் மசோதா” வின் அம்சங்கள். இந்த மசோதா, சட்டமாக வேண்டும் என்பதற்கு மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை எடுத்துக்காட்ட சில பெண்கள் இந்த மசோதாவை விரைவில் சட்டமாக்க வேண்டுமென்ற வேண்டுகோளை விடுத்துள்ளனர் என்று சொல்லப்பட்டது.

50 ஆயிரம் பெண்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர் எனக் கூறினர். 40 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில், வயது வந்த பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் 10 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம். பெண்களின் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் 50 ஆயிரம் என்பது எம்மாத்திரம்? அதற்கு என்ன மதிப்பு? மசோதாவிற்கு ஆதரவாக ஒரு பெரிய அளவு மதிப்பு வாய்ந்த வற்புறுத்தல் ஏற்பட்டுள்ளது, அதைத் தவிர்ப்பது இயலாது என்பது போல், அந்த மகஜருக்கு ஆதரவாகப் பெரிய அளவில் பிரசாரம் செய்யப்பட்டது.

50 ஆயிரம் கையெழுத்திற்கு இத்தனை மதிப்பு என்றால், பசு, காளைகளைப் போல் நாதியற்ற, கள்ளங்கபடமற்ற மிருகவதையைத் தடை செய்யக்கோரி நாடு முழுவதுமாக 2 கோடி மக்களின், (வயது வந்தோரின்) கையெழுத்துக்கள் கொண்ட வேண்டுகோள் என்ன ஆயிற்று? அந்த விண்ணப்பம் அரசிடம் தரப்பட்டதுதானே? இன்றைய அரசின் கண்ணோட்டத்தில் இரண்டு கோடியை விட 50 ஆயிரத்தின் மதிப்பு அதிகமா?

இதனால் ஒரு கருத்து தெளிவாகத் தெரிய வருகிறது. இன்றைய அரசு ஹிந்துக்களின் வாழ்வுமுறை, நம்பிக்கை, ஈடுபாடு ஆகியவற்றிற்கு கடுமையான எதிரி. எனவே அதனை வேரோடு அழிப்பது என உறுதிபூண்டுள்ளது. அதனது பற்களும் நகங்களும் கூட அதற்கு எதிரியாக வேலை செய்கிறது. அரசின் இந்தப் பிடிவாதக் கருத்துதான் ஹிந்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 50 ஆயிரம் கையெழுத்துக்களே மிக அதிகமான எண்ணிக்கை என்ற பிரமையில் ஆழ்த்தியுள்ளது.

அதனுடன் ஒப்பிடும் போது, ஹிந்து பாரம்பரியத்தை ஆதரிக்கும் வகையில் தரப்பட்டுள்ள இரண்டு கோடி மதிப்பற்றதாகத் தென்படுகிறது. பசு, காளை களின் வதையைத் தடுத்து, புனிதமான பசுவைக் காப்பாற்றும் சட்டம், ஹிந்துக்களின் ஈடுபாட்டிற்கான பெருமை பொருந்திய விஷயமாக அது இருந்த போதிலும் கூட நிராகரிக்கப்படுகிறது.

அரசு நிர்வாகத்திடம் எச்சரிக்கையுடன் இருத்தல்

‘ஹிந்து சட்ட மசோதா’ என்ற அபாயம் நீங்கிவிட்டது என்று திருப்தியுடன் வாளாவிருக்கலாகாது என்பதை மக்கள் உணர வேண்டும். அந்த அபாயம் அவ்வாறேதான் நிலைத்துள்ளது. பின்வாயில் வழியாக, நுழைந்து அவர்களது வாழ்வின் சக்தியை அழித்துவிடும். இருட்டில் அமர்ந்து கொண்டு விஷப்பல்லினால் தீண்டுவதற்குத் தயாராக இருக்கும் பாம்பைப் போன்றது இந்த அபாயம்.

‘ஹிந்து’ என்ற சொல்லே ‘இறைவனின் சாபம்’ என்று கருதுபவர்கள், எந்த உபாயத்தை, ஹிந்துக்களின் முன்னர் சமர்ப்பித்தாலும், மக்கள் அதை உறுதியாக எதிர்க்க வேண்டும். ‘ஹிந்து’ என்ற பெயரில் உள்ள எந்தப் பொருளின்பாலும் அவர்களுக்கு மதிப்போ, அன்போ இல்லை. அவர்களுக்கு ஹிந்துக்களின் வேதாந்த உணர்வோ, வாழ்க்கை முறை பற்றிய அறிவோ எள்ளளவும் கிடையாது.

மூலம்: ஶ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், பகுதி 6. / பக்கங்கள்: 83-86 / வெளியீடு: டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை. / பதிப்பாண்டு: 2006.

हिंदू कोड बिल से सावधान…

(सन १९५८ मैं प्रसारित लेख)

यह सर्वविदित है कि गत आम चुनाव के पूर्व लोकसभा में हिंदू कोड बिल पर विचार हुआ था । प्रस्तुत बिल की धाराएँ ‘हिंदू लॉ’ की परंपराओं तथा रीति-रिवाजों के बिलकुल प्रतिकूल होने के कारण सर्वसाधारण जनता में इसकी आत्यथिक तीव्र प्रतिक्रया हुई । यध्यपि इस बिल के प्रवर्तक तथा सत्ता के शीर्ष पर बैठे हमारे सर्वेसर्वा नेता हिंदुओं का ‘आधुनिकीकरण’ करने, अर्थात् हिंदुओं को अहिंदू तथा अराष्ट्रीय बनाने की अपनी सनक में बिल को पास कराने के बहुत इच्छुक थे, परंतु आनेवाले चुनावों पर दृष्टि रखते हुए उन्होंने अपने प्रयास को छोड़ने में ही बुद्धिमानी समझी ।

हिन्दुओं ने यह सोचा कि इस बिल को वापस लेकर, उसकी भावनाओं का समादार किया गया है और हमारी सामाजिक व्यवस्था, जो वैज्ञानिक एवं स्यायी सिद्धांत पर प्रसन्न होकर, उसने पुन: उन्हीं लोगों को सत्ता में प्रतिष्ठित कराया । फिर से चुनकर आना सत्ताधीशों की कपटनीति की सफलता घोषित करनेवाला है । जनता को धोके में रखनेवाली इस योजना को बनाने तथा क्रियान्वित करनेवाले व्यक्ति इस कपटपूर्ण चतुराई के लिए बधाई के पात्र हैं ।

पाश्चात्यों की भक्ति

गत अनुभव से सीख लेकर सरकार की लोकप्रियता एवं प्रतिष्ठा को खतरे में डाले बिना हिंदू कोड बिल को पुन: नहीं लाया जा सकता था, किंतु राज्य का संचालन करनेवाले नेतागन, हिंदू समाज के संपूर्ण स्वरूप को बदल डालने के लिए दृढ़प्रतिज्ञ प्रतीत होते हैं, ताकि इस भारतभूमि में हिंदू, अर्थात् भारतीय अथवा राष्ट्रीय कि कोई अवशेष बाकी न रह जाए । इससे उन्हें क्या हासिल होगा, यह कल्पना से परे है । हाँ, यह संतोष हो सकता है कि वे जनता को पाश्चात्य आदर्शों के अनुसार ढालने में सफल हुए हैं । साथ ही संसार के सामने विदेशियों के प्रति अपनी दासोचित भक्ति को प्रकट कर सकते हैं । इसी हीन-भावना के साथ वे कार्य कर रहे हैं । उन्हें एक संतोष यह भी मिल सकता है कि जो-जो उत्तम एवं पूजनीय था, जनता की श्रद्धा का केंद्र था, उसे विकृत तथा नष्ट करने में वे सफल हुए हैं ।

अब उनके सामने प्रश्न था कि जनरोष को टालते हुए इस बिल को कानून का रूप कैसे दिया जाए । इस गुत्थी को सुलझाने का रास्ता यह निकाला गया है कि बिल के छोटे-छोटे भाग कर उसे विभिन्न शीर्षकों में विभाजित कर दीया गया है । इस प्रकार जनता के रोष व तिरस्कार से बचने से लिए उसी हिंदू कोड बिल को पुन: लाया जा रहा है । धीरे – धीरे ये सारे टुकड़े एक के बाद एक पारित करवाए जाएँगे और जनता को आभास हुए बिना पूरा कानून बन जाएगा । जनता से विश्वास एवं श्रद्धा को समाप्त करने के लिए धीमा विष देने का यह एक उदाहरण है ।

जनादार नहीं

इस समय लोकसभा के सामने विवाह, तलाक, उत्तराधिकार आदि से संबंधित जो विधेयक हैं, वे हिंदू कोड बिल के अंश हैं । यह दिखाने के लिए कि इस बिल की जनता की ओर से ही बहुत माँग हो रही है, हाल ही में यह बताया गया कि कुछ महिलाओं ने बिल को शीघ्रता से पास करने को लिए सरकार को एक प्रार्थना-पत्र दिया है, जिसपर पचास हजार महिलाओं के हस्ताक्षर हैं । चालीस करोड़ जनसंख्या के देश में वयसक महिलाओं की संख्या आसानी से दस करोड़ से अधिक होगी । महिलाओं की इतनी विशाल संख्या के सामने पचास हजार का क्या महत्व है? इसका इतना प्रचार किया गया है, मानो बिल को पक्ष में यह एक प्रबल लोकप्रिय दबाव है, जिसे टालना असंभव हो । यदि पचास हजार का इतना दबाव हो सकता है, तब गाय, बैल सदृश असहाय पशुओं की हत्या पर प्रतिबंध लगाने से लिए संपूर्ण देश में से लगभग दो करोड़ वयस्कों के हस्ताक्षरों से युक्त प्रार्थना-पत्र का क्या हुआ, जो सरकार को दिया गया था? क्या वर्तमान सरकार की दृष्टि में दो करोड़ की अपेक्षा पचास हजार अधिक होते हैं?

इससे एक तथ्य स्पष्ट प्रकट होता है कि वर्तमान सरकार हिंदू जीवन-पद्धति, विश्वासों तथा श्रद्धा की घोर विरोधी है तथा उसने इसे जड़ से नष्ट करने का निश्चय किया हुआ है । उसके दाँत और नाखून उनके खिलाफ ही काम करते हैं । उसकी इसी सनक ने उसे इस भ्रम में डाल दिया है कि हिन्दुओं के विरुद्ध कदम उठाने के लिए पचास हजार बडी़ प्रभावी संख्या है, जबकि हिंदू परंपराओं के समर्थन में उसे दो करोड़ भी नगण्य लगते हैं । भले ही वह गाय, बैल की हत्या पर रोक लगाने एवं इस पवित्र प्राणी विशेष की रक्षा करने जैसी हिंदू श्रद्धा का महत्वपूर्ण विषय हो ।

राज्यकर्ताओं से सावधान

जनता को यह अच्छी तरह समझ लेना चाहिए तथा इस संतोष में भी नहीं रहना चाहिए कि हिंदू कोड बिल का खतरा समाप्त हो गया है । वह खतरा अभी ज्यों का त्यों बना हुआ है, जो पिछले द्वार से उनके जीवन में प्रवेश कर उनकी जीवन की शक्ति को खा जाएगा । यह खतरा उस भयानक सर्प के सदृश है, जो अपने विषैले दाँत से दंश करने को लिए, अंधेरे में ताक लगाए बैठा हो ।

लोगों को सतर्क होकर ऐसे सभी उपायों का दृढ़ निश्चय के साथ विरोध करना चाहिए, जो उन लोगों द्वारा प्रसतुत किए जाते हैं, जिनके लिए ‘हिंदू’ शब्द ईश्वर के शाप के समान है । जिन्हें ‘हिंदू’ नाम की किसी भी वस्तु के प्रति कोई प्रेम अथवा आदर नहीं है । उनको हिंदू तत्वज्ञान और जीवन-प्रणाली की जानकारी तो लेशमात्र भी नहीं है ।

श्री गुरुजी समग्र
खंड ६, ६२,६३,६४
डा. हेडगेवार स्मारक समिति
डा. हेडगेवार भवन
महाल,
नागपुर – ४४००३२

 

समान नागरिक कानून जरूरी नहीं है…

(अंग्रेजी समाचार पत्र ‘मदरलैंड’ के संपादक श्री मलकानी से २३ अगस्त १९७२ को दिल्ली में हुअा वार्तालाप)

श्री मलकानी: राष्ट्रीयता की भावना के पोषण के लिए क्या आप समान नागरिक संहिता को आवश्यक नहीं मानते?

श्री गुरुजी: मैं नहीं मानता । इससे आपको या अन्य बहुतों को आश्चर्य हो सक्ता है, परंतु यह मेरा मत है और जो सत्य मुझे दिखाई देता है, वह मुझे कहना ही चाहिए ।

श्री मलकानी: क्या आप यह नहीं मानते कि राष्ट्रीय एकता की वृद्धि के लिए देश में एकरूपता आवश्यक है?

श्री गुरुजी: समरसता और एकरूपता दो अलग-अलग बातें हैं । एकरूपता जरूरी नहीं हैं । भारत में सदा अपरिमित विविधताएँ रही हैं । फिर भी अपना राष्ट्र दीर्घकाल तक अत्यंत शक्तिशाली और संगठित रहा है । एकता के लिए एकरूपता नहीं, अपितु समरसता आवश्यक है ।

श्री मलकानी: पश्चिम में राष्ट्रीयता का उदय, कानूनों की संहिताबद्धता, अन्य एकरूपता स्थापित करने का काम साथ ही साथ हुआ है?
 
श्री गुरुजी: यह नहीं भूलना चाहिए कि विश्व-पटल पर यूरोप का आगमन अभी हाल की घटना है और वहाँ की सभ्यता भी अभी नई ही है । पहले उसका कोई अस्तित्व नहीं था और हो सकता है कि भविष्य में उसका अस्तित्व न भी रहे । मेरे मतानुसार, प्रकृति अत्यधिक एकरूपता नहीं चाहती । अत: भविष्य में ऐसी एकविधताओं का पश्चिमी सभ्यता पर क्या परिणाम होगा, इस संबंध में अभी से कुछ कहना बड़ी जल्दबाजी होगी । आज और अभी की अपेक्षा हमें बीते हुए सुदूर अतीत में झाँकना चाहिए और सुदूर भविष्य की ओर दृष्टि दौडा़नी चाहिए । अनेक कार्यों के परिणाम सुदीर्घ, विलंबकारी एवं अप्रत्यक्ष होते हैं । इस विषय में सहस्रावधि वर्षों का हमारा अनुभव है । प्रमाणित सिद्ध हुई समाज-जीवन की पद्धति है । इनके आधार पर हम कह सकते हैं कि विविधता और एकता साथ-साथ रह सकती हैं तथा रहती हैं ।

श्री मलकानी: अपने संविधान से निर्देशक सिद्धांतों में कहा गया है कि राज्य समान नागरिक संहिता के लिए प्रयत्न करेगा?

श्री गुरुजी: यह ठीक है । ऐसा नहीं कि समान नागरिक संहिता से मेरा कोई विरोध है, किंतु संविधान में कोई बात होने मात्र से ही वांछनीय नहीं बन जाती । फिर, यह भी तो है कि अपना संविधान कुछ विदेशी संविधानों के जोड़-तोड़ से निर्मित हुआ है । वह न तो भारतीय जीवन दृष्टिकोण से रचा गया है और न उसपर आधारित है ।

श्री मलकानी: क्या आप यह मानते हैं कि समान नागरिक संहिता का विरोध मुसलमान केवल इसलिए कर रहे हैं, क्योंकि वे अपना पृथक अस्तित्व बनाए रखना चाहते हैं?

श्री गुरुजी: किसी वर्ग, जाति अथवा संप्रदाय द्वारा निजी अस्तित्व बनाए रखने से मेरा तब तक कोई झगड़ा नहीं है, जब तक कि इस प्रकार का अस्तित्व राष्ट्रभक्ति की भावना से दूर हटाने का कारण नहीं बनता ।

मेरे मत से कुछ लोग समान नागरिक संहिता की आवश्यकता इसलिए महसूस करते हैं कि उनके विचार में मुसलमानों को चार शादियाँ करने का अधिकार होने के कारण उनकी आबादी में असंतुलित वृद्धि हो रही है । मुझे भय है कि समस्या के प्रति सोचने का यह एक निषेधात्मक दृष्टिकोण है ।

वास्तविक समस्या तो यह है कि हिंदुओं और मुसलमानों के बीच भाई-चारा नहीं है । यहाँ तक कि धर्मनिरपेक्ष कहलानेवाले लोग भी मुसलमानों को पृथक जमात मानकर ही विचार करते हैं । निश्चित ही उनके वोट-बैंक के लिए उन्हें खुश करने का तरीका अपनाया है । अन्य लोग भी उन्हें मानते तो अलग ही हैं, किंतु चाहते यह हैं कि उनके पृथक अस्तित्व को समाप्त कर उन्हें एकरूप कर दिया जाए । तुष्टिकरण करनेवालों और एकरूपता लानेवालों में कोई मौलिक अंतर नहीं है । दोनों ही मुसलमानों को पृथक और बेमेल मानते हैं ।

मेरा दृष्टिकोण पूर्णत: भिन्न है । जब तक मुसलमान इस देश और यहाँ की संस्कृति से प्यार करता है, उसका अपनी जीवन-पद्धति के अनुसार चलना स्वागत योग्य है । मेरा निश्चित मत है कि मुसलमानों को राजनीति खेलनेवालों ने खराब किया है । कांग्रेस ही है, जिसने केरल में मुस्लिम लीग को पुनर्जीवित कर देश-भर में मुस्लिम सांप्रदायिकता को बढ़ावा दिया है ।

श्री मलकानी: इन्हीं तर्कों के आधार पर क्या यह नहीं कहा जा सकता कि हिंदू आ कोड का निर्माण किया जाना भी अनावश्यक और अवांछनीय है ?

श्री गुरुजी: मैं निश्चित रूप से मानता हूँ कि हिंदू- कोड राष्ट्रीय एकता और एकसूत्रता की दृष्टि से पूर्णत: अनावश्यक है । युगों से अपने यहाँ असंख्य संहिताएँ रही हैं, किंतु उनके कारण कोई हानि नहीं हुई । अभी-अभी तक केरल में मातृसत्तात्मक पद्धति थी । उसमें कौन सी बुराई थी ? प्राचीन और आधुनिक सभी विधि-शास्त्री इस बात पर एकमत हैं कि कानूनों की अपेक्षा रूढ़ियाँ अधिक प्रभावी होती हैं, और यही होना भी चाहिए । ‘शास्त्राद् रूढ़िर्बलियसी’ शास्त्रों ने कहा है कि रूढ़ियाँ शास्त्रों से प्रभावी हुआ करती हैं तथा रीतियाँ स्थानीय या समूह की हुआ करती हैं । स्थानीय रीति-रिवाजों या संहिताओं को सभी समाजों द्वारा मान्यता प्रदान की गई है ।

श्री मलकानी: यदि समान नागरिक कानून जरूरी नहीं है, तो फिर समान दंड-विधान की भी क्या आवश्यकता है?

श्री गुरुजी: इन दोनों में एक अंतर है । नागरिक संहिता का संबंध व्यक्ति एवं उसके परिवार से है । जबकि दंड-विधान का संबंध न्याय, व्यवस्ता तथा अन्य असंख्य बातों से है । उसका संबंध न केवल व्यक्ति से है, अपितु बृहद् रूप में वह समाज से भी संबंधित है ।

श्री मलकानी: अपनी मुस्लिम बहने को पर्दे में बनाए रखना और बहुविवाह का शिकार होने देना क्या योग्य है ?

श्री गुरुजी: मुस्लिम प्रथाओं के प्रति आपकी आपत्ति यदि मानवीय कल्याण के व्यापक आधार पर हो तब तो, वह उचित है । ऐसे मामलों में सुधारवादी दृष्टिकोण ठीक ही है । परंतु यांत्रिक ढंग से कानून के बाह्य उपचारों द्वारा समानता लाने का दृष्टिकोण रखना ठीक नहीं होगा । मुसलमान स्वयं ही अपने पुराने नियम-कानूनों में सुधार करें । वे यदि इस निष्कर्ष पर पहुँचते हैं कि बहुविवाह-प्रथा उनके लिए अच्छी नहीं है, तो मुझे प्रसन्नता होगी । किंतु अपना मत मैं उनपर लादना नहीं चाहूँगा ।

श्री मलकानी: तब तो यह एक गहन दार्शनिक प्रश्न बनता प्रतीत होता है ?

श्री गुरुजी: निश्चित ही यह ऐसा है । मेरा मत है कि एकरूपता राष्ट्रों के विनाश की सूचना है । प्रकृति एकरूपता स्विकार नहीं करती । मैं, विविध जीवन-पद्धतियों के संरक्षण के पक्ष में हूँ । फिर भी ध्यान इस बात का रहना चाहिए कि ये विविधताएँ राष्ट्र की एकता में सहायक हों । वे राष्ट्रीय एकता के मार्ग में रोडा़ न बनें ।

श्री गुरुजी समग्र
खंड ९: १९५,१९६,१९७, १९८
डा. हेडगेवार स्मारक समिति
डा. हेडगेवार भवन
महाल,
नागपुर – ४४००३२

இந்தியாவுக்குப் பொருந்தாத இந்து கோட்பில்களும் பொது சிவில் சட்டமும்…

இந்தியாவில் ஆண் பெண் ஆகிய இருபாலரது வாழ்க்கை முழுவதையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடியும் தமக்கான சிவில் சட்டங்களை கொண்டு இன்றளவும் திகழ்கின்றன. அதாவது அக்குடியின் படி வாழக்கைக் கண்ணோட்டம், அதன்வழியே பிறப்பு முதல் இறப்பு வரை படிநிலைகள், எந்த நிலையில் என்ன நடக்க வேண்டும், அதற்கான வரம்புகள், பொறுப்புகள், கடமைகள், எழும் சிக்கல்களுக்கான தீர்வுகள் என அனைத்தையும் கொண்டு திகழ்கின்றன.

ஆனால் இவற்றை ஒரு குடியில் பிறக்கும் குழந்தைகள் அறிந்து கொண்டு விடாத படிக்கு பிரிக்க செய்யப்பட்ட ஏற்பாடே பள்ளிக் கல்வி முறை. பள்ளிக்கு அப்பாலும் பள்ளிகளின் வாயிலாக தரப்படும் கல்வியை சொல்லித்தர நிச்சயமாக பல வழிகளில் முடியும்.

இதில் தந்தை வழி சமூகங்களும் உள்ளன. தாய் வழிச் சமூகங்களுக்கும் உள்ளன. இவையிரண்டுமே இருபாலரது முழு வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு ஏற்பட்டவையாக உள்ளன.

மைசூர் மகாராஜா குடும்பம், திருவனந்தபுரம் அரச குடும்பம் அதன்படியே நாயர்கள் என்று நமதருகே எழும் தாய் வழிச் சமூக மரபுகள், துளு மக்களுக்கு (பன்ட், பில்லவா முதலிய குடிகள்) பூதாள பாண்டியன் ஏற்படுத்திய தாய்வழி ஆலியசந்தான மரபு என நீண்டு, மேகாலயாவில் காசி எனப்படும் குடியின் வாழ்க்கை முறை என்று விரிகிறது. இவை ஒன்றுக்கொன்றும் கூட பல வேறுபாடுகளை கொண்டுள்ளன.

இப்படி எண்ணற்ற வாழ்க்கை முறைகளை ஆயிரமாயிராம் ஆண்டுகளாக கொண்டு திகழும் இந்நாட்டுக்கு ஆணுக்கும் பயன்படாது பெண்ணுக்கும் பயன்படாது யாருக்கும் பயன்படாது இவை எல்லாவற்றையும் நாசமாக்கும் நோக்குடன், யாருடைய முழு வாழக்கைக்கும் உதவாத ஒரு உருப்படாத முறையை திணித்தவை தான் இந்து கோட் பில்கள்.

ஒரு உண்மயான இந்துத்வ அரசென்பது மேற்படி அனைத்து இந்துக் குடிகளுக்கும் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை மீட்டெடுத்துக் கொள்ள ஆவண செய்ய வேண்டுமே அன்றி அதை சுத்தமாய் துடைத்தெறியும் வண்ணம் பொது சிவில் சட்டமென்று முன்மொழிவது, பாரம்பரியம் பாரம்பரியம் என்று பேசுவோரைக் கொண்டே இந்நாட்டின் பண்பாட்டை கொலை செய்தவற்கு விரித்த வலையில் இந்துக்கள் சிக்கிக் கொண்டுவிட்டனர் என்பதைக் காட்டுவதாகும். தற்கொலைக்குச் சமமாகும்.

பெண்ணியம் பேட்ரியார்ச்சி என்று பேசும் இருபாலருக்குமே கூட தேவைப்பட்டால் மேற்படி தாய்வழி சமுதாயங்கள் எவ்வாறு வாழக்கை முழுவதையும் எடுத்துக் கொண்டு தீர்வுகளை அளிக்கின்றன என்று ஆராய்ந்து அவ்வழி போல் தமது வழிமுறையை அமைத்துக் கொள்ளலாம். அது இல்லையென்றால் புதிய தனி வழி ஏற்படுத்தி வாழ்ந்து கொள்ளலாம்.  ஆனால் அனைவரது வழியையும் அரசாங்கத்தை லாபி செய்து மாற்றும் உரிமை கிடையாது.

மாற்றுக் கருத்துக்களை மதிப்பதென்பது பல விசயங்களில் இணங்குகின்ற குடிகள் ஒருவருக்கொருவர் முரண்படுகிற விசயங்களில் அவரவர் அவரவர் போக்கில் அடுத்தவர் போக்கில் குறுக்கிடாது வாழ்ந்து கொண்டும் ஒருத்தரை மற்றொருவர் பொறுத்துக் கொள்வதுமே ஆகும்.

பொது சிவில் சட்டம் தேவையில்லாதது…

குருஜி கோல்வால்கர்
குருஜி கோல்வால்கர்

மதர்லேண்ட் என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஶ்ரீ கே. ஆர். மல்கானிக்கும், ஆர். எஸ். எஸ் இரண்டாவது தலைவர் ஶ்ரீ குருஜி கோல்வால்கருக்கும் இடையே 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 ஆம் தேதி அன்று பொது சிவில் சட்டம். இந்து கோட் பில்கள், இஸ்லாமிய வாழ்க்கை முறையில் உள்ள குறைகளை களைவது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற உரையாடல்.

ஶ்ரீ மல்கானி:

தேசிய உணர்விற்கு ஊட்டமளிக்க நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஶ்ரீ குருஜி:

நான் அப்படி நினைக்கவில்லை. நான் இப்படிச் சொல்வது உங்களுக்கும் பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். ஆனால் என் மனதிற்கு எது உண்மை என்று படுகிறதோ அதைச் சொல்ல வேண்டும் என்பதே என் கொள்கை.

ஶ்ரீ கே ஆர் மல்கானி:

நாட்டில் ஒற்றுமை வளர நீங்கள் தேசத்திற்கு ஒருரூபத்தன்மையை இன்றியமையாததாக கருதவில்லையா?

ஶ்ரீ கோல்வால்கர்:

ஒருங்கிணைவு (சமரசதா) என்பது வேறு. ஒருரூபத்தன்மை என்பது வேறு. ஒரு ரூபத்தன்மையின் அவசியம் எதுவும் இல்லை. இந்தியாவில் எக்காலத்திலும் எண்ணற்ற வேறுபாடுகள் மக்களிடயைே நிலவி வந்துள்ளன. ஆயினும் நாடானாது குறைவற்ற வலிமையும் ஒருங்கிணைப்பும் கொண்டதாகத் திகழ்ந்துள்ளது. ஒற்றுமைக்கு ஒருரூபத்தன்மை அவசியம் கிடையாது. ஒருங்கிணைவு இன்றியாமையாதது.

ஶ்ரீ கே ஆர் மல்கானி:

மேற்கத்திய நாடுகளில் தேசியத்தின் உதயம், சட்டங்களைத் தொகுத்தல், ஒரு ரூபத்தன்மையை ஏற்படுத்துதல் இவையெல்லாம் ஒரே நேரத்தில் நடந்ததே?

ஶ்ரீ கோல்வால்கர்:

உலக வரைபடத்தில் ஐரோப்பா முளைத்தது சமீபகால நிகழ்வு என்பதையும் அதன் நாகரிகம் மிகப் புதியது என்பதையும் நீங்கள் மறக்கக் கூடாது. ஐரோப்பா என்று ஒன்று இல்லாமல் இருந்தது. இனி அது இல்லாமலும் போகலாம்ஒரேயடியாக அச்சில் வார்த்து எடுத்தது மாதிரியான அமைப்பை இயற்கை விரும்புவதில்லை என்பது என் கருத்து. எனவே ஒற்றைத் தன்மை மிகுந்த ஐரோப்பிய நாகரிகம் வருங்காலத்தில் என்ன ஆகும் என்பதை இப்போதே சொல்வது பொருந்தாது. ‘இன்று, இப்போதுஎன்பதிலிருந்து சற்று நெடுந்தூரம் கடந்த காலத்திற்குள்ளும் நெடுந்தூரம் எதிர்காலத்திற்குள்ளும் பார்வையை செலுத்த வேண்டும். பல வேலைகளின் விளைவு தென்பட வெகுநாள் ஆகிறது. நிதானமாக, சந்தடியில்லாமல் வந்து சேர்கிறது. இந்த விஷயத்தில் பல்லாயிரம் ஆண்டுகால அனுபவம் பெற்றது நம் நாடு. சிறந்தது என்று நிரூபணம் ஆகியுள்ள சமுதாய வாழ்க்கை முறை உள்ளது. ஒற்றுமையும் வேற்றுமைகளும் ஒன்றாக இருக்க முடியும், இருக்கின்றன என்று நம்மால் கூற முடியும்.

கே ஆர் மல்கானி:

அரசியல் சாசனத்தின் வழிகாட்டிக் கோட்பாடுகளில் பொது சிவில் சட்டம்காண அரசு முயற்சி செய்யும் என்று சொல்லப்படுகிறதே?

ஶ்ரீ குருஜி கோல்வால்கர்:

உண்மைதான். ‘பொது சிவில் சட்டம்என்பதுடன் எனக்கு விரோதம் எதுவும் இல்லை. ஆனாலும், அரசியல் சாசனத்தில் இடம் பெற்றிருப்பதால் மட்டும் எதுவும் விரும்பத்தக்கதாகிவிடும் என்பதற்கில்லை. நம் அரசியல் சாசனம் பல்வேறு நாடுகளின் அரசியல் சாசனங்களில் இருந்து பெயர்தெடுத்தும், ஒட்டுப் போட்டும் தயாரிக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். அது இந்திய வாழ்க்கைக் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதாகவோ அதை ஆதாரமாக கொண்டதாகவோ உருவாக்கப்படவில்லை.

ஶ்ரீ மல்கானி:

முஸ்லீம்கள் தாங்கள் தொடர்ந்து தனிப்பட்டு இருப்பதற்காகவே பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதை ஏற்கிறீர்களா?

ஶ்ரீ குருஜி:

எந்தப் பிரிவினரும் சாதியினரும் சம்பிரதாயத்தவரும் தங்கள் தனித்தன்மையை கட்டிக் காப்பதை நான் எதிர்க்கமாட்டேன். அந்த தனித்தனமையானது அவர்களை தேசிய உணர்விலிருந்து விலகிப் போகச் செய்யாத வரை எனக்கு ஆட்சேபமில்லை.

முஸ்லீம்களுக்கு நான்குமுறை திருமணம் செய்துகொள்ள உரிமை உள்ளதால் பொது சிவில் சட்டம்இல்லாத நிலையில், அவர்கள் ஜனத்தொகை, சம விகிதத்தை மீறி அதிகரித்துவிடும் என்று சிலர் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். பிரச்சனையை அணுகுவதில் இது எதிர்மறையான போக்கு என்று அஞ்சுகிறேன்.

ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சகோதர உணர்வு இல்லை என்பதுதான் உண்மையான பிரச்சனை. இது எந்த அளவிற்கு போயிருக்கிறது என்றால் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லப்படுவோர் கூட முஸ்லீம்களை தனித்தோர் சமூகமாகக் கணக்கிட்டே சிந்தனை செய்கிறார்கள். தங்கள் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களைக் குஷிப்படுத்தும் வழிமுறையைக் கடைபிடிக்கிறார்கள் என்பது உறுதி.

இன்னும் சிலர் முஸ்லிம்கள் தனிப்பட்டு இருப்பதைப் பார்க்கிறார்கள். ஆனால் முஸ்லீம்களின் தனி இருப்பையே ஒழித்து அவர்களை ஒரேரூபமாாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

குஷிப்படுத்துவோர் ஒருரூபமாக்க நினைப்போர் ஆகியோரிடையே அடிப்படை வித்தியாசம் ஏதுமில்லை. இருவருமே இஸ்லாமியர்களை தனிப்பட்டவர்களாக பொருந்தாப் பிரிவினராக பார்க்கிறார்கள்.

என்னுடைய கண்ணோட்டம் முற்றிலும் மாறானது. முஸ்லீம்கள் இந்த தேசத்தை அதன் கலாச்சாரத்தை நேசித்தால் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது வரவேற்கத் தக்கது.

அரசியல் விளையாட்டு விளையாடுபவர்கள் முஸ்லீம்களை கெடுத்துவிட்டார்கள் என்று நான் உறுதியாகக் கூறுவேன். காங்கிரஸ் கட்சிதான் கேரளத்தில் முஸ்லீம் லீகிற்கு புத்துயிர் அளித்து தேசம் முழுவதும் முஸ்லீம் வகுப்புவாதத்தை வளர்த்துவிட்டிருக்கிறது.

ஶ்ரீ மல்கானி:

இதே வாதத்தின் அடிப்படையில் ஹிந்து கோட்சட்டம் கொண்டு வந்தது கூட தேவையற்றது, விரும்பத்தகாதது தானே?

ஶ்ரீ குருஜி:

நான் உறுதியாகச் சொல்வேன். தேசத்தின் ஒருமைக்கும் மக்களின் ஒருங்கிணைப்புக்கும் ஹிந்து கோட்சட்டம் முற்றிலும் தேவையற்றது. யுக யுகாந்தரமாக நம் நாட்டில் எண்ணற்ற சம்ஹிதைகள் இருந்துள்ளன. ஆனால் அவைகளால் ஒரு தீங்கும் ஏற்பட்டதில்லை.

சமீப காலம் வரை கேரளத்தில் தாய்வழி உரிமையை ஆதாரமாகக் கொண்ட வழிமுறை இருந்தது. அதில் என்ன கேடு வந்து விட்டது? பழைய காலத்தவர்கள், இன்றைய காலத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வழக்கறிஞர்களும் சட்ட வல்லுநர்களும், ‘சட்டங்களை விட மரபுகளே (சம்பிரதாயங்களே) மக்களிடம் அதிக நம்பிக்கை பெற்றது. அன்றியும் அது சரியும் கூடஎன்கிறார்கள்.

சாஸ்த்ராத் ரூடிர்பலீயஸி‘ (சாஸ்திரங்களைவிட சம்பிரதாயமே அதிக பலம் வாய்ந்தது). இந்த சம்பிரதாயங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திலோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் செல்வாக்குடன் இருக்கலாம் என்கிறது சாஸ்திரம்.

வட்டாரங்களைப் பொறுத்த ரீதி ரிவாஜ்‘ (பழக்க வழக்கங்கள்) அல்லது சம்ஹிதைகளுக்கு எல்லா சமூகங்களிலும் அங்கீகாரம் இருந்து வந்துள்ளது.

ஶ்ரீ மல்கானி:

பொது சிவில் சட்டம் தேவையில்லையென்றால் பொது குற்றவியல் சட்டம் மட்டும் அவசியமா?

ஶ்ரீ குருஜி:

இவ்விரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. சிவில் சட்டம் தனிநபர், அவர் குடும்பம் இவை பற்றியது. ஆனால் குற்றவியல் (Criminal) சட்டம், நீதி, ஒழுங்குமுறை போன்ற எண்ணற்ற விஷயங்களுடன் சம்பந்தப்பட்டது. அது தனிநபர் மட்டுதல்லாது முழு சமுதாயத்துடனும் கூட தொடர்புள்ளது.

ஶ்ரீ மல்கானி:

நம் முஸ்லிம் சகோதரிகள் பர்தா அணிவது தொடர்கிறது. இவர்கள் பலதாரமணங்ககளால் பாதிக்கப்படுகிறார்கள். இது தகுமா?

ஶ்ரீ குருஜி:

முஸ்லிம் வழக்கங்களைக் குறித்து உங்கள் ஆட்சேபம் மக்கள் நலம் அடிப்படையில் தோன்றியதானால், தவறில்லை. இவ்வித சந்தர்ப்பங்களில் சீர்திருத்த அணுகுமுறை சரியே.

ஆனால் இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்வதுபோல், சட்டங்கள் இயற்றி அவற்றின் மூலம் சமத்துவம் திணிப்பது சரியல்ல.

முஸ்லிம்கள் அவர்களாகவே தங்களின் பழைய மரபுகள், சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டு வரட்டும். அவர்களே பலதார பலதார திருமணங்கள் சரியல்ல என்ற முடிவுக்கு வந்தால் எனக்கு சந்தோஷமே. ஆனால் என் கருத்தை அவர்கள் மேல் திணிக்க விரும்ப மாட்டேன்.

ஶ்ரீ மல்கானி:

அப்படியென்றால் இது பெரிய சித்தாந்த ரீதியான பிரச்சனையாக உருவெடுக்கும்போல் தெரிகிறதே?

ஶ்ரீ குருஜி:

நிச்சயமாக இது அப்படித்தான். எல்லோரும் ஓர் அச்சில்வார்த்து எடுக்கப்பட்ட மனிதர்கள் போல் செயல்படுவது தேசங்களுக்கு நாசம் தான்.

இயற்கை ஒற்றைத்தன்மை அமைப்பை ரசிப்பதில்லை. நான் பன்முக வாழ்க்கை முறைகளைக் கட்டிக்காப்பதை ஆதரிப்பவன்.

ஆனால் இந்த வேற்றுமைகள் தேசிய ஒருமைக்கு துணைபுரிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேசிய ஒருமைக்கு இட்டுச் செல்லும் பாதைக்கு இடையூறாகி விடக்கூடாது.

மூலம்: ஶ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், பகுதி 9. / பக்கங்கள்: 216-219 / வெளியீடு: டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை. / பதிப்பாண்டு: 2006.

Guruji Golwalkar on Hindu Code Bills, Uniform Civil Code

In an interview to K R Malkani, for the Motherland magazine in the year 1972, all that Guruji Golwalkar the then RSS chief had to say covering wide range of questions relating to whether One nation means One Personal law for all, Hindu Code Bills, Uniform Civil Code, Personal Laws based on Jati, Sampradaya or any other means, Islamic issues for more children & Triple Talaq etc.,

Stop implementing Uniform Civil Code on Indians

The Law commission of India is seeking public opinion on Uniform Civil Code.

Link: http://lawcommissionofindia.nic.in/questionnaire.pdf

It is time Indians wake up and strongly respond with their disapproval for the same. Uniform Civil Code aspires to kill the diversity of India by imposing Uniform way of Life infringing upon the freedom of religion of an Individual as well as the collective rights of people to associate and share a common way of life under what ever umbrella they may want.

What the Union Government shall rather do is to set up a body where any set of people shall register their shared code of life, live and settle disputes in accordance to that among themselves. This is how every Indigenous Peoples of India have all along been living and functioning thoughout its history. And its the most democratic way of letting people live their own way of life.

Off late such rights have also been ratified by United nations with its declartion on the rights of Indigenous Peoples: http://www.un.org/esa/socdev/unpfii/documents/DRIPS_en.pdf

It is time that Indian consitution is rather amended if needed in this direction giving back its peoples their right to determine their life and arrive at their own solutions to their problems than to impose what the Government thinks as solutions, through Uniform Civil Code.

Even United States that has the history of thrashing the life and aspirations of its own Indigenous Peoples, today has recognized close to 572 Indigenous Peoples and has given them the oppurtunity to enact their own civil consitution and live and settle disputes in accordance to that, which India shall try to emulate.

Constitutions of Indigenous Peoples of United States could be found from: http://www.narf.org/nill/triballaw/index.html

In days to come Sarvadharma, requests everyone to respond against Uniform Civil Code to the Law Commission’s request and we would also be writing to Law commision with our strong objection to any attempt to force upon Indians who are naturally diverse and united a Uniform way of Life.

We should also insist that all current personal Laws, Hindu Code Bills, Muslim Personal Law etc., that are already ruining the society be annulled and let people to re-organize themselves.

We will organize a gathering too in this regard. We request everyone who receives this notification share it widely through all possible medias and create awareness that their freedom to define their own way of life is at stake.

https://www.change.org/p/sarvadharma-stop-implementing-uniform-civil-code-on-indians