இந்து சிவில் கோட்களை ரத்து செய்வோம் என்று இந்துக்களுக்கு வாக்குறுதி அளித்த ஜன சங்கம்…

 

Deba Prasad Gosh
Deba Prasad Gosh

1957 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்திற்கான இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே இந்துக்களுடைய அவரவர் வாழ்க்கை முறைகளில் குறுக்கிடும்  இந்து திருமணச் சட்டமும் இந்து வாரிசுச் சட்டமும் பொதுவாக திணிக்கப்பட்டிருந்தது.

 

தேபபிரசாத் கோஷ் தலைமையிலான ஜன சங்கம், தனது 1957 தேர்தல் அறிக்கையில், இந்துக்களின் அவரவர் வாழ்க்கை முறையில் குறுக்கிடும் வண்ணம் இயற்றப்பட்ட இவ்விருச் சட்டங்களையும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தது.

1 ஜனவரி 1957 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் இது குறித்து வெளியான செய்தி விவரங்கள் ஆதாரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்

தங்களுக்கென்று பொதுவானதொரு தொடக்கம், நெடிய வரலாறு, வாழ்க்கைக் கண்ணோட்டம், அவற்றின் அடிப்படையிலான தோற்ற அடையாளங்களோடு கூடிய பழக்க வழக்க வழிபாட்டு வாழ்க்கை முறைகளை முன்னுரிமைகளைக் கொண்டு விளங்கும் மக்கள் குழுக்கள் பழங்குடிகள் எனப்படுவர். வனவாசிகளை மட்டுமல்லாது இது நாட்டில் வாழும் அனைத்து ஜாதிகளையும் குறிக்கும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்த ஒப்பதாம் ஒப்பு

வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று

போன்ற திருக்குறள்கள் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.

பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்

என்று சிலப்பதிகாரத்தின் மங்கலவாழ்த்தும் பழங்குடியின் பொருள் உணர்த்தும்.

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலு மருந்து

என்று தொல்குடியொன்றில் வரும் தொடர்ச்சியினை வாழ்வில் ஒருவர் பெருதற்கரிய அருமருந்தாய் விவரிக்கிறது திரிகடுகத்தின் முதல் பாடல்.

பழம்பெரும் பாரத நாட்டின் பழங்குடிகளை பற்றி ஆராய்ந்த மத்திய அரசின் மானுடவியல் துறை (Anthropological Survey of India), கே. எஸ். சிங் என்பார் தலைமையில் 6748 பழங்குடிகளை பட்டியலிட்டு அவற்றுள் 4635 குடிகளைப் பற்றி ஆராய்ந்து அவர்களது வாழ்க்கை வழக்கங்களை 120 வால்யூம்களில் People of India என்ற பெயரில் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளது.

உலகின் கண்டங்கள் அனைத்துமே இப்படிப் பட்ட பழங்குடிகளால் நிறைந்ததுதான் என்றாலும் கடந்த ஐநூறு ஆண்டுகளில் கிறிஸ்தவ, ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அதற்கு முந்தைய இஸ்லாமிய பரவல் உள்ளிட்டவற்றால் இதர கண்டங்கள் தங்கள் பழங்குடி வழக்கங்களை அனேகமாக இழந்தே விட்டன எனலாம். அதுபோல அல்லாது இன்றும் பழங்குடிகள் தங்கள் வாழ்க்கை வழிமுறைகளை தொடரும் பூமி நமது பாரத பூமி.

வீழ்ந்து எஞ்சியுள்ள பிற கண்டத்து பழங்குடிகளின் மீட்சியைக் கருத்தில் கொண்டு ஐநா சபை கடந்த 2007 ஆம் வருடம் பழங்குடிகளின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தை வெளியிட்டது. இது United Nations Declarations on the Rights of Indigenous Peoples என்று அறியப்படுகிறது.

இதில் பழங்குடிகளுக்கென்று உள்ள உரிமைகளோடு அவற்றை நிலைநாட்ட நவீன அரசுகள் செய்ய வேண்டியன குறித்த வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளது. இது இந்தியப் பழங்குடிகள் அனைத்திற்கும் அவற்றின் மீட்சிக்கும் கூட பொருத்தமான ஒரு பிரகடனமான இருக்கிறது.

இந்தியாவிலும் ஐரோப்பியர் வருகைக்கு பிறகு மதமாற்றம், மரபு திரிப்பு, கலப்பு என பல வகைகளில் இந்திய பழங்குடிகளை அவர்களது வாழ்க்கை முறைகளை விசேசங்களைய ஒழித்து பொதுவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜாதி ஒழிப்பு, சொந்த மரபின் மீது பற்றின்றி செய்து தன் மரபுக் கொலையை தானே மேற்கொள்ளும் செயலைச் செய்ய தள்ளப்படும் சூழல் ஒவ்வொரு மரபினரையும் சூழந்துள்ளது.

தன் மரபை தான் எவ்வாறு ஒழித்துக் கொண்டேன் என்று பெருமை பேசுவோர் சீர்திருத்தவாதிகளாக போற்றவும் பாராட்டவும்பட்டு மரபை விடாது தொடர்போர் பழைமைவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு அவர்களுக்கான வெளிகள் திட்டமிட்டு இல்லாது செய்யப்பட்டு வருகிறது. தன் கையால் தன் கண்ணைக் குத்திக் கொள்வது போல இதில் ஒரு பழங்குடியைச் சார்ந்து அதன் வழக்குகளை ஒழிக்க முன் நின்றோருக்கு ஊக்கம் பாராட்டு அங்கீகாரம் அளிக்கும் போக்கும் தொடரந்து இருந்து வருகின்றது. அக்காலத்தில் இருந்தே இவற்றில் இருந்து தங்களை மீட்டுக் கொள்ள இந்திய பழங்குடிகளும் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகின்றன. அவை அக புற தீய சக்திகள் இரண்டையுமே எதிர் கொண்டு வருகின்றன.

பழங்குடிகள் முற்றாக நிர்கதியாக்கப்பட்டுவிட்ட அமேரிக்க நாட்டில் அந்நாட்டின் 572 பழங்குடிகள் முறையாக அங்கீரிக்கப்பட்டு அவர்களுக்கென்று பிரத்யேக சட்ட திட்டங்கள் வாழ்க்கை முறைகள் நேடிவ் அமேரிக்கன் கான்ஸ்டிடியூசன் என்ற பெயரில் அமலில் உள்ளன. அமேரிக்கப் பழங்குடிகள் என்று மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, கனடா, தென்னமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளிலும் ஐரோப்பியர் ஏகாதிபத்தியத்தால் தங்கள் முன்னோர்களையும் முறைகளையும் இழந்த பழங்குடிகளும் மெல்ல மீளத் தொடங்கிவிட்டன.

இதன் போக்கு கிறிஸ்தவத்திற்கு முந்தைய ஐரோப்பா, இஸ்லாத்துக்கு முந்தைய ஈரான், எகிப்து என யாரோ சிலராவது குரல் உயர்த்தும் அளவிற்கு அந்நாடுகளிலும் சலனத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. முற்றாக இப்படி தங்கள் மரபுகளை இழந்த பிற கண்டத்து பழங்குடிகளே எழும் போது இன்றளவும் தத்தமது மரபுகளை தொடர்ந்து பேணி வரும் இந்திய பழங்குடிகளின் பேரெழுச்சி இவர்கள் அனைவருக்குமே கூட புத்துணர்வை அளிக்கவல்லதாக அமையும்.

இந்தியாவிலும் கூட பார்சி மக்கள் தங்களுக்கென சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமண வாழ்க்கை முறையை பெற்றிருக்கிறார்கள். சீக்கியர்களும் தங்கள் பாரம்பரிய மணவாழ்க்கை முறையை வருங்காலத்திலும் உறுதிபடுத்திக் கொள்ளும் விதமாக 2012 ஆம் வருடம் இந்திய பாராளுமன்றத்தின் ஒப்புதலோடு ஆனந்த் மேரேஜ் ஆக்ட் பெற்றனர்.

இதுபோன்று ஏனைய அனைத்து இந்திய பழங்குடிகளும் நடைமுறையில் தங்களுக்கென வாழ்க்கை முறைகளை கொண்டிருந்தாலும் அவற்றிற்குரிய அங்கீகாரமில்லாது இருக்கிறார்கள். உதாரணத்திற்கு திருமணத்திற்கு இந்து குடிகளிடையே கோத்திரம், கூட்டம், மனை என்று பலகாலமாக தொடர்ந்து வரும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவற்றையெல்லாம் முற்றாக மறுத்து இவற்றை ஒட்டுமொத்தமாக சிதைக்கும் நோக்கத்தோடு 1956 ஆம் வருட வாக்கில் இந்து கோட் பில்கள் என்ற பெயரில் பொதுவான வாழ்க்கை முறையை இந்துக்கள் மீது மட்டும் அன்றைய இந்திய அரசாங்கம் சுமத்தியது.

இந்த முயற்சியை இந்துக்களுக்காக குருஜி கோல்வால்கர் தலைமையிலான ஆர் எஸ் எஸ், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தலைமையிலான ஜன சங்கம், இந்து மகா சபா, ராம் ராஜ்ய பரிஷத், ஆதீனங்கள், மடாதிபதிகள், பழங்குடி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளும் டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஆசார்ய கிருபாலினி உள்ளிட்ட தலைவர்களும், சாமான்ய இந்துக்களும் திரண்டு முற்றாக எதிர்த்து நிராகரித்தனர். ஆயினும் அரசு பொது வழக்கை சட்டமாக்கிவிட்டது.

இதனைத் தொடர்ந்தும் பழங்குடிகள் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களில் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள அவரவர் அளவில் பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு நிலைநாட்டிக் கொள்ளவும் செய்துள்ளனர்.

தில்லை தீக்ஷிதர்கள், சிதம்பரம் நடராஜர் ஆலயம் தொடர்பாக தங்களுக்கே உரிமை உள்ளது எனவும் தாங்கள் விசேசமானதொரு இந்து பிரிவினர் என்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் நிலைநாட்டியது இம்முயற்சிகளில் குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆயினும் இந்திய அரசியல் சாசனத்தில் பழங்குடிகளை சுட்டும் விதமாக Religious Denomination Article 26 என்ற பிரிவு இருந்தாலும், அவற்றின் கீழ் யார் வருவார் என்பது தொடர்பான தெளிவான நடைமுறைகள் வகுக்கப்படவில்லை. ஒரு பெரிய சிக்கல் நேரும் போது அதன் அடிப்படையில் தலைமுறைகள் பிடிக்கும் பெரும்போராட்டத்தை நடத்தி இந்துக் குடிகள் இதன்கீழ் தஞ்சமடைந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

எந்தப் பழங்குடியும் கோராத போதே பொதுவாக வகுக்கப்பட்டுவிட்ட இந்து கோட் பில் முறைக்கும் அவரவர் பாரம்பரிய முறைகளுக்கும் பிணக்கு ஏற்படும் போது பொது வாழ்க்கை முறையே சட்டப்படி செல்லுபடியாகி குடி மரபுகள் அடியோடு ஒழியும் ஆபத்தும் எழுகிறது. இதனால் இந்து குடிகளிடையே பகை வளர்ந்து இந்து ஒற்றுமையும் குலைகிறது.

பொதுவாக கொண்டு வரப்பட்டுள்ள வாழ்க்கை முறைகளால் பழங்குடிகளுக்கு நன்மைகள் விளைந்ததாக குறிப்பிட்டுச் சொல்வதற்கும் இல்லை. இவற்றால் இந்து குடும்பங்கள் குடிகள் நாளுக்கு நாள் சிதறி வருவதையே கணிக்க முடிகிறது.

பழங்குடிகளை தாங்கும் சக்திகளாக, அவற்றின் சிறப்பம்சங்களுகேற்றபடி குலம் பற்றி தங்களுக்கான தனியம்சங்களை நிர்ணயித்து அனுசரித்து காலங்காலமாக வாழ்ந்து குடிகளை தழைக்கச் செய்வது குலப் பெண்டிரே. பழங்குடிப் பெண்களே பல குலங்களுக்கு அஸ்திவாரம் என்பதால் பழங்குடிப் பெண்கள் மீதான பல்வேறு தாக்குதல்களும் மரபொழிப்பு கூட்டங்களால் உலகளாவி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைலிருந்து பழங்குடிப் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள விரிவான ஏற்பாடுகளுக்கும் தேவை இருக்கிறது.

அரசியல் சாசனம் தரும் தனி மனித சுதந்திரத்தில், Right to Association முக்கியமான ஒன்று. தாங்கள் ஒரே பழங்குடியைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூடுவதும் அதனால் எழும் கூட்டு உரிமைகளை அடைவதும் தனி மனித உரிமையின் நீட்சியே. அங்கீகரிக்கப்பட வேண்டியதே.

ஒரு நாட்டில் பழங்குடிகள் தங்களை தற்காத்துக் கொள்ள முதல் தேவை அதற்குரிய அங்கீகாரம் தான். சிறப்புகளை மறுத்து பொதுவாக அணுகத் தொடங்கும் போது சமூகங்கள் சிதைவுறத் தொடங்குகின்றன.

தத்தமது அடுத்த வாரிசுகளை தங்கள் வழிகளை முறைகளை அடையாளங்களைச் சொல்லி வளர்ப்பது, தங்கள் முறைகளை அனுசரித்து கல்வி அளிப்பது, வழிபாட்டு முறைகளில் ஈடுபடுத்துவது என அனைத்திலும் பழங்குடிகளுக்கு இருக்கக் வேண்டிய சுதந்திரம் இன்றைய சூழலில் பெரும் நெருக்குதலுக்கு ஆளாகின்றது.

இந்தியாவில் நாடளாவி மைனாரிட்டி சமயங்கள் எனவும் மாநிலம் பொருத்து மொழி சிறுபான்மையுனர் எனவும் அரசியல் சாசனத்தால் கொடுக்கப்படும் கல்வி தொடர்பான வலுவான சலுகைகள் ஒவ்வொரு பழங்குடிக்குமே பொருத்தமானதுதான்.

பழங்குடிகளை ஒழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பொதுவாக்கி இல்லாது செய்யும் விதத்தில் அமைந்துள்ளன. இப்படி ஒவ்வொரு பழங்குடியும் எதோ ஒரு விதத்தில் தாக்கப்படும் போது தன்னால் முடிந்த அளவிற்கு எதிர்வினையாற்றுகிறது. சில முயற்சிகள் வெற்றி பெறுகின்றன. பல முயற்சிகள் தோல்வியடைந்து மேற்கொண்டு மல்லுக்கட்ட திராணியின்றி வழக்கொழிந்து போகின்றன. இப்படி இந்திய நாடு இழந்தவை பல.

பொதுவாக்கி தாக்கப்படும் போது தனித்தனியாக எதிர்கொள்ளாது திரண்டு எதிர்கொள்ள வேண்டும் என்ற நினைவு சமுதாயத்தில் ஜல்லிக்கட்டு, சபரிமலை, முறை சாரா திருமண எதிர்ப்பு விவகாரங்களில் எழுந்தது நம்பிக்கையளிக்கும் நிகழ்வுகளாகும். இதுவே இந்துத் தன்மையும் கூட.

நவீன காலத்திற்கு ஏற்ப இந்திய பழங்குடிகள் இவற்றை எதிர்கொண்டு தத்தமது தொடர்ச்சியை காலாகாலத்திற்கும் உறுதி செய்து கொள்ளும் விதமாக உலகளாவி இதே சிந்தனையுள்ளோர் எழுச்சி கொண்டு ஐநாவின் பிரகடனம் வரை கண்டிருப்பது இதற்கான காலம் உலகளாவி கூடி வருகிறது என்பதற்கான அறிகுறியே.

இவற்றைக் கருத்தில் கொண்டு குடிகளுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ள பொதுவான தளங்களே பொதுவாக மறுக்கப்பட்டு வரும் சூழலில் Hindu Spiritual Service Fair போன்றவை அவற்றின் மீட்சிக்கு பொது தளம் அமைத்து தந்து பெரும் பங்காற்றி வருகின்றன.

அரசு ஆலயங்களை பராமரிப்பதும் நிர்வகிப்பதும் கூடாது என்பது போலவே குடிகளுக்கான வாழ்க்கை முறையினை வகுக்கவும் கூடாது. குடிகளின் வாழ்க்கை முறை அங்கீகாரத்திற்காகவும் தொடர்ச்சிக்காகவும் வேண்டிய காரியங்களை குடியமைப்புகளோடும், குடியினரோடும், குடியினரைக் கொண்டும், ஒத்த நோக்கம் கொண்டுள்ள பிற அமைப்புகளோடும் செயல்பட்டு வரும் அமைப்பு சர்வதர்மா.

வரும் நூற்றாண்டு உலகளாவி பழங்குடிகளின் எழுச்சி நூற்றாண்டாக அமைய வேண்டும். நவீன அறிவியல் தொழில்நுட்பங்களின் துணையோடு இந்திய பழங்குடிகள் பற்றிய ஆய்வுகளை சர்வதர்மா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இந்திய பழங்குடிகள் உலகளாவி பல காரணங்களுக்காக இடம் பெயர்ந்து வரும் வேளையில், பரவும் நாடுகளில் கூட பழங்குடி வழக்குகளில் தொடரத்தக்கவற்றை தொடர வேண்டிவற்றை தாங்களே அதற்குரிய முடிவுகளை மேற்கொள்வதை உறுதி செய்யும் செயல்களில் ஈடுபடவேண்டியுள்ளது.

உலகையே கிறிஸ்தவ மயமாக்குவோம், உலகையே இஸ்லாமிய மயமாக்குவோம், கம்யூனிச கார்பரேட் மயமாக்குவோம் என்று பழங்குடிகளும் அவர்களது வழக்கங்களும் சிதைவுக்கு உள்ளாகும் தருணத்தில் அதற்குரிய எதிர்வினையாக உலகை மறுபடியும் நற்குடிகள் மயமாக்குவோம் என்று இந்திய பழங்குடிகளும் அரசும் கூட தங்களது உலகம் பரந்த நடவடிக்கையின் ஒரு அம்சமாக கொண்டு பணியாற்ற வேண்டியுள்ளது.

சொந்த நாட்டில் தடம் மாறியோரை முன்னோர் வழிக்கு திருப்பும் செயல்களுக்கு நிகராக இப்படி உலகளாவி தங்கள் முன்னோர் வழக்குகளை தக்க வைத்துக் கொள்ள விழைவோரோடு இணைந்து செயல்பட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஒன்றே யென்னின் ஒன்றே யாம், பலவென் றுரைக்கின் பலவே யாம்
அன்றே யென்னின் அன்றே யாம், ஆமென் றுரைக்கின் ஆமே யாம்
இன்றே யென்னின் இன்றே யாம், உளதென் றுரைக்கின் உளதே யாம்
நன்றே நம்பிக் குடிவாழ்க்கை, நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா! – கம்பர்

11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மாவின் அரங்கு

11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மா

வேளச்சேரி குருநானக் கல்லூரியில் கடந்த 28/01/2020 தொடங்கி நடைபெற்று வரும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பின் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு நமது பணிகள் குறித்து வருவோரிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கண்காட்சியினை பார்வையிட வருவோர் அரங்கு எண் S3 இல் நமது உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடலாம்.

வாய்ப்பளித்த ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி நிர்வாகத்திற்கு சர்வதர்மா சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

RSS condemning interference of Government over various spheres of social life by resolution in 1959…

1959 March : A.B.P.S

Widening Range of Governmental Controls

The tendency of the Government to establish its control and monopoly, directly or indiretly, over the various spheres of social life is becoming more and more pronounced over the last few years.

(Note: Nehru brought Hindu Code Bills in years preceding to this resolution)

In addition to the increasing measure of Governmental control and monopoly over trade and industry, the proposed co-operative farming scheme which aims at the liquidation of the small farmer strikes at the very roots of democracy. The way the educational and religious institutions are being brought under the control of Government has no parallel, except in dictatorial and fascist countries.

As a result, concentration of power in the hands of the Government is growing at a fast pace and individual freedom is getting curtailed. This policy, instead of opening new vistas for the development of under-developed sections of the society is only hindering their proper growth. Based as it is on foreign ideologies, this policy is positively repugnant to our national ethos. It has also given rise to various kinds of conflicts among the people, as also highly immoral and anti-social tendencies.

It is the firm opinion of the A.B.P.S that this all-round onslaught on people’s liberty is a grave crime against all human values and a mischievous conspiracy to suppress the Hindu character of this land. The A.B.PS cautions all the devout followers of Bharateeya culture against the serious consequences of these policies ans calls upon them to stand up unitedly in defence of the freedom and dignity of the individual.

RSS RESOLVES….

FULL TEXT OF RESOLUTIONS FROM 1950 TO 1983

Page 15,16

Published by:

Prakashan Vibag
Rastriya Swyamsevak Sangh, Karnataka.

Vijayadasami, 1983
Bangalore.

அரசாங்கம் சிவில் சட்டம் வகுக்கிறேன் என்று வாழ்க்கை வழிமுறைகளில் குறுக்கிடுவது கண்டு ரோஷம் பிறக்க வேண்டாமா?

ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது?

பிரிட்டிஷ் அரசு திருமண வயது செட் செய்த சம்பவத்தோடு ஒப்பிட்டு அப்படி இன்று செய்ய யார் இருக்கிறார் என பரமாச்சாரியார்..

இருந்தாலும் முன்பெல்லாம் சீர்திருத்த வாதங்களுக்கு எதிர் வாதம் செய்ய ஜனங்களுக்குத் தெரியாவிட்டாலுங்கூட, “இதுவரை பெரியவர்கள் எப்படிப் பண்ணி வந்திருக்கிறார்களோ அப்படியே போவோம்; புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்ற அபிப்ராயம் இருந்தது. அதனால்தான் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி இந்த கல்யாண வயசு reform விஷயமாக இரண்டு முறை கவுன்சிலில் மசோதா கொண்டு வந்தும் அது நிறைவேறவில்லை.

அப்புறம் தான் ஸார்தா என்பவர், இப்போது நாம் “சாரதா சட்டம்” என்று ஒரு அம்மாள் போட்ட சட்டம் மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிற இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்குக்கூட சரிக்குச் சமன் ஆதரவாக 50%, எதிர்தரப்பில் 50% என்றுதான் வோட் விழுந்தது. அந்த ஸந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் ஸர்க்காரானது, “காங்கிரஸ் கேட்கிற ஸ்வயராஜ்யத்தைத்தான் நாம் தரவில்லை; அவர்களுக்குத் திருப்தியாக, மதத்தைக் கெடுப்பதற்காவது ஸஹாயம் செய்யலாம்” என்று நினைத்து நாமினேட்டட் மெம்பரை வைத்து இந்த மசோதாவுக்கு ஆதரவாக வோட் பண்ணச்சொல்லி, விவாஹ வயதை உயர்த்தியேயாக வேண்டும் என்பதைச் சட்டமாகச் செய்து விட்டார்கள். அதாவது public opinion (பொது ஜன அபிப்ராயம்) -ஐ மீறி கவர்மென்ட் பலத்தினாலே அந்த மசோதா ‘பாஸ்’ ஆயிற்று.

இப்போது நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது பழைய பழக்கங்களில் பக்தி விச்வாஸம் போய்விட்டது. பிரிட்டிஷ் ராஜ்யத்தில் சாரதாச் சட்டம் அமுலானவுடன், அவர்கள் கொடுத்திருந்த மஹாமஹோபாத்யாய டைட்டிலை “வேண்டாம்” என்று துறந்த பண்டிதர்கள் உண்டு. வங்காளத்திலிருந்த பஞ்சாணன தர்க்க ரத்ன பட்டாசார்யரும், திருவிசநல்லூரிலிருந்து காசிக்குப் போய் ஸெட்டில் ஆகிவிட்ட லக்ஷ்மண சாஸ்திரி (தமிழ்நாட்டு பிராம்மணர் என்று தெரிவதற்காக ‘லக்ஷ்மண சாஸ்திரி திராவிட்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்) என்பவரும் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தார்கள்.

இப்போது நம் ஸ்வதந்திர இந்தியாவில் ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து இப்படிக் குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது?

தெய்வத்தின் குரல்.

தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..

ஹிந்து வாழ்க்கை முறைகளை குலைக்கும் வகையில் சட்டம் போடுவதை சாடும் பரமாச்சாரியார்…

Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். ‘மதச்சார்பில்லாதது’ என்று இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில் ஸர்க்கார் தலையிடலாமே தவிர, மத (religious) விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய மதத்திலே இப்படி மதம்-சமூகம் -வீடு-தனி மனுஷ்யன் என்று தனித்தனியாகப் பிரிக்காமல், எல்லாவற்றையும் சேர்த்துப் பின்னி integrate பண்ணி [ஒருங்கிணைத்து] அல்லவா வைத்திருக்கிறது? அதனால் சமூக விஷயம் என்று ஸர்க்கார் போடுகிற சட்டமும் மதத்தையே அல்லவா பாதிக்கிறது? இதை ஒப்புக்கொள்ளாமல் ‘இன்னின்ன விஷயங்களோடு மதம் முடிந்துவிடுகிறது; மற்றதெல்லாம் ராஜாங்கம் ஸம்பந்தப்பட்ட ஸமூஹ விஷயம்’ என்கிறார்கள்.

சரி, எல்லா மதத்திலுமே சில அம்சங்களிலாவது ஸமூஹ ஸமாசாரங்களும் வந்து விடுகிறதே, அவற்றின் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால்- இங்கே தான் ரொம்ப வேதனையாயிருக்கிறது. ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் எல்லா மதமும் ஸமம் என்று சொன்னாலும், சிறுபான்மை மதஸ்தர்கள் social reform சட்டங்களை ஆக்ஷேபித்து, “இது எங்கள் மதத்தில் சொன்னதற்கு விரோதமாயிருக்கிறது. இது குரானுக்கு விரோதம்;கிறிஸ்துவக் கோட்பாட்டுக்கு முரணானது” என்று சொன்னால் உடனே அந்த மதஸ்தர்கள் விஷயத்தில் இந்தச் சட்டங்களுக்கு விலக்கு தந்துவிடுகிறார்கள். இம்மாதிரிச் சிறுபான்மை மதஸ்தருக்கு மட்டும் குடும்பக்கட்டுப்பாடு போன்ற ஒன்றில் விலக்குத் தந்தால் எதிர்காலத்தில் அவர்களே பெரும்பான்மையாகி விடவும் இடமேற்படுகிறது. ஆனால் ‘ஸெக்யூலர் ஸ்டேட்’ டாக இருந்தும் ஹிந்து மத விஷயமாக மட்டும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. ‘மைனாரிட்டி ரிலிஜன்’காரர்கள் போல் நம்மிலே ஒரு சூடு பிறந்து ஆட்சேபிக்கிறவர்களே இல்லை. அப்படியே நாலு, பேர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பிற்போக்குக்காரர்கள், பத்தாம் பசலிகள் (obscurantist) என்று அவர்களுக்குப் பெயர் கொடுத்துவிட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

‘ஸெக்யூலர் ஸ்டேட்’ என்றால் மதச் சார்பில்லாதஸர்க்கார் என்றே அர்த்தம். மத விரோதமான என்று அர்த்தமில்லை. ஒரு மதம் மட்டுமின்றி எல்லா மதமுமே அபிவிருத்தியாவது ஸெக்யூலர் ஸ்டேட்டுக்கு ஸம்மதமானதுதான்’ என்றெல்லாம் பெரிசாகப் பிரஸங்கம் பண்ணுபவர்கள் பண்ணினாலும், பிரத்யக்ஷத்தில் ஹிந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு விரோதமில்லாத காரியங்களைப் பண்ணுவதுதான் இங்கே ஸெக்யூலர் ஸ்டேட் என்று நடந்து வருகிறது! தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது.

தெய்வத்தின் குரல்

ஹிந்து சட்ட மசோதா பற்றிய எச்சரிக்கை…

(1958 ல் வெளியான கட்டுரை)

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் மக்களவையில் ‘ஹிந்து சட்ட மசோதா’ (Hindu Code Bill) பற்றி விவாதம் நடந்தது என்பதை அனைவரும் அறிவர். மேலே குறிப்பிட்ட சட்டத்தின் சில பிரிவுகள், ஹிந்து சட்டத்தின் பரம்பரையான பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் முரணாக இருக்கின்ற காரணத்தால், சாதாரண மக்களுக்கிடையில் இதற்கு மிகத் தீவிரமான எதிர்ப்பு இருந்தது. இந்த ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள, தலைவர்கள், ஹிந்துக்களை கற்காலத்தவர் ஆக்கும் பொருட்டு, அதாவது ஹிந்துக்களை ஹிந்துக்கள் அல்லாதவர்களாக மாற்றி, தேசிய உணர்வு அற்றவர்களாக மாற்றும் தமது பிடிவாதத்தினால் ‘மசோதா’வை சட்டமாக மாற்றியே ஆகவேண்டும் என மிகத் தீவிரமான விருப்பம் உடையவர்களாக இருந்தனர். ஆனால் வரப்போகும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு தம் முயற்சியை விட்டுவிடுவதுதான் புத்திசாலித்தனமான செயல் என எண்ணினர்.

இந்த மசோதாவை திரும்பப் பெற்று, தமது உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பு அளித்துள்ளது என்று ஹிந்துக்களை நினைக்க வைத்தனர். விஞ்ஞானம் மற்றும் நிலையான கொள்கை, கோட்பாடுகள் என்ற அஸ்திவாரத்தின் மேல் அமைந்துள்ள நமது சமூக அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அபாயம் நீங்கிவிட்டது என்று மக்களும் மகிழ்ச்சி அடைந்து, மீண்டும் அதே தலைவர்களுக்கு வாக்களித்து அரியணையில் அமர்த்தினர். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களது கபட நாடகத்திற்கு வெற்றி முழக்கமாயிற்று. மக்களை ஏமாற்றி இத்திட்டத்தைத் தயாரித்து செயலாக்கிய மனிதர்கள், பாராட்டிற்குரியவர்கள்.

மேற்குநாட்டவரின் பக்தி

கடந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட அரசு, மக்களால் விரும்பப்படுவதையும், மரியாதையையும் இழந்தால் அன்றி ‘ஹிந்து சட்ட மசோதா’வை மீண்டும் கொண்டு வர இயலாது என அறிந்தது. ஆனால் அரசை நிர்வகிக்கும் தலைவர்கள், ஹிந்து சமூகத்தை முற்றிலும் மாற்றியே தீருவது என்ற உறுதி பூண்டவர்களாகத் தென்படுகின்றனர்.

இவர்களது செயல், பாரத மண்ணில் ஹிந்துக்கள், அதாவது பாரதத்தைச் சேர்ந்த, நாட்டிற்கேயுரிய சின்னமாக எதுவுமே மீதி இருக்கலாகாது என்பது போல் உள்ளது. இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. மேற்கத்திய நாகரிகத்திற்கு ஒத்த வகையில் மக்களை மாற்றியுள்ளோம் என்ற திருப்தி அடையலாம்.

அவ்வாறே, அந்நியர்கள் முன் நம் அடிமைத்தனமான விசுவாசத்தையும், உலகினர் அறியும்படி வெளிப்படுத்த இயலும். இந்த தாழ்வு மனப்பான்மையுடன்தான் அவர்கள் வேலை செய்து கொண்டு உள்ளனர்.

ஹிந்துக்கள் எவற்றை எல்லாம் உயர்ந்தது என்று கருதி வழிபட்டனரோ, எவை எல்லாம் மக்களின் ஈடுபாட்டிற்கு மையமாக இருந்தனவோ, அவற்றையெல்லாம் சிதைத்து விட்டோம், பாழடித்து விட்டோம் என்று மனமகிழ்ச்சி அடையலாம்.

மக்களுடைய கோபத்திற்கு இரையாகாமல் இந்த மசோதாவிற்கு ‘சட்ட’ வடிவை எப்படித்தரலாம் என்பதுதான் அவர்களுக்கு முன்னர் உள்ள பிரச்சனை. இந்தச் சிக்கலுக்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “மசோதாவை” சின்னஞ்சிறு பகுதிகளாக, பல தலைப்புகளின் கீழ் பிரித்துள்ளனர். இவ்வாறு மக்களின் கோபம் நிராகரிப்பு ஆகியவைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள, அதே “ஹிந்து கோட் பில்”, வேறு வடிவத்தில் நுழைக்கப்பட்டு வருகிறது. மெதுவாக இப்பகுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும்.

மக்கள் அறியாதவண்ணம் “மசோதா” முழுவதும் சட்டமாக்கப்பட்டு விடும். மக்களின் நம்பிக்கை மற்றும் ஈடுபாட்டினை அழிப்பதற்காக மெதுவாக செயல்படும் விஷத்தைத் தருவது போன்றதே இது.

பொது மக்களின் ஆதரவு இல்லை

இன்று லோக்சபாவின் முன் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை ஆகியவை சம்பந்தமான மசோதாக்கள் உள்ளன. அவை அனைத்தும் “ஹிந்து கோட் மசோதா” வின் அம்சங்கள். இந்த மசோதா, சட்டமாக வேண்டும் என்பதற்கு மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை எடுத்துக்காட்ட சில பெண்கள் இந்த மசோதாவை விரைவில் சட்டமாக்க வேண்டுமென்ற வேண்டுகோளை விடுத்துள்ளனர் என்று சொல்லப்பட்டது.

50 ஆயிரம் பெண்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர் எனக் கூறினர். 40 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில், வயது வந்த பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் 10 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம். பெண்களின் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் 50 ஆயிரம் என்பது எம்மாத்திரம்? அதற்கு என்ன மதிப்பு? மசோதாவிற்கு ஆதரவாக ஒரு பெரிய அளவு மதிப்பு வாய்ந்த வற்புறுத்தல் ஏற்பட்டுள்ளது, அதைத் தவிர்ப்பது இயலாது என்பது போல், அந்த மகஜருக்கு ஆதரவாகப் பெரிய அளவில் பிரசாரம் செய்யப்பட்டது.

50 ஆயிரம் கையெழுத்திற்கு இத்தனை மதிப்பு என்றால், பசு, காளைகளைப் போல் நாதியற்ற, கள்ளங்கபடமற்ற மிருகவதையைத் தடை செய்யக்கோரி நாடு முழுவதுமாக 2 கோடி மக்களின், (வயது வந்தோரின்) கையெழுத்துக்கள் கொண்ட வேண்டுகோள் என்ன ஆயிற்று? அந்த விண்ணப்பம் அரசிடம் தரப்பட்டதுதானே? இன்றைய அரசின் கண்ணோட்டத்தில் இரண்டு கோடியை விட 50 ஆயிரத்தின் மதிப்பு அதிகமா?

இதனால் ஒரு கருத்து தெளிவாகத் தெரிய வருகிறது. இன்றைய அரசு ஹிந்துக்களின் வாழ்வுமுறை, நம்பிக்கை, ஈடுபாடு ஆகியவற்றிற்கு கடுமையான எதிரி. எனவே அதனை வேரோடு அழிப்பது என உறுதிபூண்டுள்ளது. அதனது பற்களும் நகங்களும் கூட அதற்கு எதிரியாக வேலை செய்கிறது. அரசின் இந்தப் பிடிவாதக் கருத்துதான் ஹிந்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 50 ஆயிரம் கையெழுத்துக்களே மிக அதிகமான எண்ணிக்கை என்ற பிரமையில் ஆழ்த்தியுள்ளது.

அதனுடன் ஒப்பிடும் போது, ஹிந்து பாரம்பரியத்தை ஆதரிக்கும் வகையில் தரப்பட்டுள்ள இரண்டு கோடி மதிப்பற்றதாகத் தென்படுகிறது. பசு, காளை களின் வதையைத் தடுத்து, புனிதமான பசுவைக் காப்பாற்றும் சட்டம், ஹிந்துக்களின் ஈடுபாட்டிற்கான பெருமை பொருந்திய விஷயமாக அது இருந்த போதிலும் கூட நிராகரிக்கப்படுகிறது.

அரசு நிர்வாகத்திடம் எச்சரிக்கையுடன் இருத்தல்

‘ஹிந்து சட்ட மசோதா’ என்ற அபாயம் நீங்கிவிட்டது என்று திருப்தியுடன் வாளாவிருக்கலாகாது என்பதை மக்கள் உணர வேண்டும். அந்த அபாயம் அவ்வாறேதான் நிலைத்துள்ளது. பின்வாயில் வழியாக, நுழைந்து அவர்களது வாழ்வின் சக்தியை அழித்துவிடும். இருட்டில் அமர்ந்து கொண்டு விஷப்பல்லினால் தீண்டுவதற்குத் தயாராக இருக்கும் பாம்பைப் போன்றது இந்த அபாயம்.

‘ஹிந்து’ என்ற சொல்லே ‘இறைவனின் சாபம்’ என்று கருதுபவர்கள், எந்த உபாயத்தை, ஹிந்துக்களின் முன்னர் சமர்ப்பித்தாலும், மக்கள் அதை உறுதியாக எதிர்க்க வேண்டும். ‘ஹிந்து’ என்ற பெயரில் உள்ள எந்தப் பொருளின்பாலும் அவர்களுக்கு மதிப்போ, அன்போ இல்லை. அவர்களுக்கு ஹிந்துக்களின் வேதாந்த உணர்வோ, வாழ்க்கை முறை பற்றிய அறிவோ எள்ளளவும் கிடையாது.

மூலம்: ஶ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், பகுதி 6. / பக்கங்கள்: 83-86 / வெளியீடு: டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை. / பதிப்பாண்டு: 2006.

हिंदू कोड बिल से सावधान…

(सन १९५८ मैं प्रसारित लेख)

यह सर्वविदित है कि गत आम चुनाव के पूर्व लोकसभा में हिंदू कोड बिल पर विचार हुआ था । प्रस्तुत बिल की धाराएँ ‘हिंदू लॉ’ की परंपराओं तथा रीति-रिवाजों के बिलकुल प्रतिकूल होने के कारण सर्वसाधारण जनता में इसकी आत्यथिक तीव्र प्रतिक्रया हुई । यध्यपि इस बिल के प्रवर्तक तथा सत्ता के शीर्ष पर बैठे हमारे सर्वेसर्वा नेता हिंदुओं का ‘आधुनिकीकरण’ करने, अर्थात् हिंदुओं को अहिंदू तथा अराष्ट्रीय बनाने की अपनी सनक में बिल को पास कराने के बहुत इच्छुक थे, परंतु आनेवाले चुनावों पर दृष्टि रखते हुए उन्होंने अपने प्रयास को छोड़ने में ही बुद्धिमानी समझी ।

हिन्दुओं ने यह सोचा कि इस बिल को वापस लेकर, उसकी भावनाओं का समादार किया गया है और हमारी सामाजिक व्यवस्था, जो वैज्ञानिक एवं स्यायी सिद्धांत पर प्रसन्न होकर, उसने पुन: उन्हीं लोगों को सत्ता में प्रतिष्ठित कराया । फिर से चुनकर आना सत्ताधीशों की कपटनीति की सफलता घोषित करनेवाला है । जनता को धोके में रखनेवाली इस योजना को बनाने तथा क्रियान्वित करनेवाले व्यक्ति इस कपटपूर्ण चतुराई के लिए बधाई के पात्र हैं ।

पाश्चात्यों की भक्ति

गत अनुभव से सीख लेकर सरकार की लोकप्रियता एवं प्रतिष्ठा को खतरे में डाले बिना हिंदू कोड बिल को पुन: नहीं लाया जा सकता था, किंतु राज्य का संचालन करनेवाले नेतागन, हिंदू समाज के संपूर्ण स्वरूप को बदल डालने के लिए दृढ़प्रतिज्ञ प्रतीत होते हैं, ताकि इस भारतभूमि में हिंदू, अर्थात् भारतीय अथवा राष्ट्रीय कि कोई अवशेष बाकी न रह जाए । इससे उन्हें क्या हासिल होगा, यह कल्पना से परे है । हाँ, यह संतोष हो सकता है कि वे जनता को पाश्चात्य आदर्शों के अनुसार ढालने में सफल हुए हैं । साथ ही संसार के सामने विदेशियों के प्रति अपनी दासोचित भक्ति को प्रकट कर सकते हैं । इसी हीन-भावना के साथ वे कार्य कर रहे हैं । उन्हें एक संतोष यह भी मिल सकता है कि जो-जो उत्तम एवं पूजनीय था, जनता की श्रद्धा का केंद्र था, उसे विकृत तथा नष्ट करने में वे सफल हुए हैं ।

अब उनके सामने प्रश्न था कि जनरोष को टालते हुए इस बिल को कानून का रूप कैसे दिया जाए । इस गुत्थी को सुलझाने का रास्ता यह निकाला गया है कि बिल के छोटे-छोटे भाग कर उसे विभिन्न शीर्षकों में विभाजित कर दीया गया है । इस प्रकार जनता के रोष व तिरस्कार से बचने से लिए उसी हिंदू कोड बिल को पुन: लाया जा रहा है । धीरे – धीरे ये सारे टुकड़े एक के बाद एक पारित करवाए जाएँगे और जनता को आभास हुए बिना पूरा कानून बन जाएगा । जनता से विश्वास एवं श्रद्धा को समाप्त करने के लिए धीमा विष देने का यह एक उदाहरण है ।

जनादार नहीं

इस समय लोकसभा के सामने विवाह, तलाक, उत्तराधिकार आदि से संबंधित जो विधेयक हैं, वे हिंदू कोड बिल के अंश हैं । यह दिखाने के लिए कि इस बिल की जनता की ओर से ही बहुत माँग हो रही है, हाल ही में यह बताया गया कि कुछ महिलाओं ने बिल को शीघ्रता से पास करने को लिए सरकार को एक प्रार्थना-पत्र दिया है, जिसपर पचास हजार महिलाओं के हस्ताक्षर हैं । चालीस करोड़ जनसंख्या के देश में वयसक महिलाओं की संख्या आसानी से दस करोड़ से अधिक होगी । महिलाओं की इतनी विशाल संख्या के सामने पचास हजार का क्या महत्व है? इसका इतना प्रचार किया गया है, मानो बिल को पक्ष में यह एक प्रबल लोकप्रिय दबाव है, जिसे टालना असंभव हो । यदि पचास हजार का इतना दबाव हो सकता है, तब गाय, बैल सदृश असहाय पशुओं की हत्या पर प्रतिबंध लगाने से लिए संपूर्ण देश में से लगभग दो करोड़ वयस्कों के हस्ताक्षरों से युक्त प्रार्थना-पत्र का क्या हुआ, जो सरकार को दिया गया था? क्या वर्तमान सरकार की दृष्टि में दो करोड़ की अपेक्षा पचास हजार अधिक होते हैं?

इससे एक तथ्य स्पष्ट प्रकट होता है कि वर्तमान सरकार हिंदू जीवन-पद्धति, विश्वासों तथा श्रद्धा की घोर विरोधी है तथा उसने इसे जड़ से नष्ट करने का निश्चय किया हुआ है । उसके दाँत और नाखून उनके खिलाफ ही काम करते हैं । उसकी इसी सनक ने उसे इस भ्रम में डाल दिया है कि हिन्दुओं के विरुद्ध कदम उठाने के लिए पचास हजार बडी़ प्रभावी संख्या है, जबकि हिंदू परंपराओं के समर्थन में उसे दो करोड़ भी नगण्य लगते हैं । भले ही वह गाय, बैल की हत्या पर रोक लगाने एवं इस पवित्र प्राणी विशेष की रक्षा करने जैसी हिंदू श्रद्धा का महत्वपूर्ण विषय हो ।

राज्यकर्ताओं से सावधान

जनता को यह अच्छी तरह समझ लेना चाहिए तथा इस संतोष में भी नहीं रहना चाहिए कि हिंदू कोड बिल का खतरा समाप्त हो गया है । वह खतरा अभी ज्यों का त्यों बना हुआ है, जो पिछले द्वार से उनके जीवन में प्रवेश कर उनकी जीवन की शक्ति को खा जाएगा । यह खतरा उस भयानक सर्प के सदृश है, जो अपने विषैले दाँत से दंश करने को लिए, अंधेरे में ताक लगाए बैठा हो ।

लोगों को सतर्क होकर ऐसे सभी उपायों का दृढ़ निश्चय के साथ विरोध करना चाहिए, जो उन लोगों द्वारा प्रसतुत किए जाते हैं, जिनके लिए ‘हिंदू’ शब्द ईश्वर के शाप के समान है । जिन्हें ‘हिंदू’ नाम की किसी भी वस्तु के प्रति कोई प्रेम अथवा आदर नहीं है । उनको हिंदू तत्वज्ञान और जीवन-प्रणाली की जानकारी तो लेशमात्र भी नहीं है ।

श्री गुरुजी समग्र
खंड ६, ६२,६३,६४
डा. हेडगेवार स्मारक समिति
डा. हेडगेवार भवन
महाल,
नागपुर – ४४००३२

 

समान नागरिक कानून जरूरी नहीं है…

(अंग्रेजी समाचार पत्र ‘मदरलैंड’ के संपादक श्री मलकानी से २३ अगस्त १९७२ को दिल्ली में हुअा वार्तालाप)

श्री मलकानी: राष्ट्रीयता की भावना के पोषण के लिए क्या आप समान नागरिक संहिता को आवश्यक नहीं मानते?

श्री गुरुजी: मैं नहीं मानता । इससे आपको या अन्य बहुतों को आश्चर्य हो सक्ता है, परंतु यह मेरा मत है और जो सत्य मुझे दिखाई देता है, वह मुझे कहना ही चाहिए ।

श्री मलकानी: क्या आप यह नहीं मानते कि राष्ट्रीय एकता की वृद्धि के लिए देश में एकरूपता आवश्यक है?

श्री गुरुजी: समरसता और एकरूपता दो अलग-अलग बातें हैं । एकरूपता जरूरी नहीं हैं । भारत में सदा अपरिमित विविधताएँ रही हैं । फिर भी अपना राष्ट्र दीर्घकाल तक अत्यंत शक्तिशाली और संगठित रहा है । एकता के लिए एकरूपता नहीं, अपितु समरसता आवश्यक है ।

श्री मलकानी: पश्चिम में राष्ट्रीयता का उदय, कानूनों की संहिताबद्धता, अन्य एकरूपता स्थापित करने का काम साथ ही साथ हुआ है?
 
श्री गुरुजी: यह नहीं भूलना चाहिए कि विश्व-पटल पर यूरोप का आगमन अभी हाल की घटना है और वहाँ की सभ्यता भी अभी नई ही है । पहले उसका कोई अस्तित्व नहीं था और हो सकता है कि भविष्य में उसका अस्तित्व न भी रहे । मेरे मतानुसार, प्रकृति अत्यधिक एकरूपता नहीं चाहती । अत: भविष्य में ऐसी एकविधताओं का पश्चिमी सभ्यता पर क्या परिणाम होगा, इस संबंध में अभी से कुछ कहना बड़ी जल्दबाजी होगी । आज और अभी की अपेक्षा हमें बीते हुए सुदूर अतीत में झाँकना चाहिए और सुदूर भविष्य की ओर दृष्टि दौडा़नी चाहिए । अनेक कार्यों के परिणाम सुदीर्घ, विलंबकारी एवं अप्रत्यक्ष होते हैं । इस विषय में सहस्रावधि वर्षों का हमारा अनुभव है । प्रमाणित सिद्ध हुई समाज-जीवन की पद्धति है । इनके आधार पर हम कह सकते हैं कि विविधता और एकता साथ-साथ रह सकती हैं तथा रहती हैं ।

श्री मलकानी: अपने संविधान से निर्देशक सिद्धांतों में कहा गया है कि राज्य समान नागरिक संहिता के लिए प्रयत्न करेगा?

श्री गुरुजी: यह ठीक है । ऐसा नहीं कि समान नागरिक संहिता से मेरा कोई विरोध है, किंतु संविधान में कोई बात होने मात्र से ही वांछनीय नहीं बन जाती । फिर, यह भी तो है कि अपना संविधान कुछ विदेशी संविधानों के जोड़-तोड़ से निर्मित हुआ है । वह न तो भारतीय जीवन दृष्टिकोण से रचा गया है और न उसपर आधारित है ।

श्री मलकानी: क्या आप यह मानते हैं कि समान नागरिक संहिता का विरोध मुसलमान केवल इसलिए कर रहे हैं, क्योंकि वे अपना पृथक अस्तित्व बनाए रखना चाहते हैं?

श्री गुरुजी: किसी वर्ग, जाति अथवा संप्रदाय द्वारा निजी अस्तित्व बनाए रखने से मेरा तब तक कोई झगड़ा नहीं है, जब तक कि इस प्रकार का अस्तित्व राष्ट्रभक्ति की भावना से दूर हटाने का कारण नहीं बनता ।

मेरे मत से कुछ लोग समान नागरिक संहिता की आवश्यकता इसलिए महसूस करते हैं कि उनके विचार में मुसलमानों को चार शादियाँ करने का अधिकार होने के कारण उनकी आबादी में असंतुलित वृद्धि हो रही है । मुझे भय है कि समस्या के प्रति सोचने का यह एक निषेधात्मक दृष्टिकोण है ।

वास्तविक समस्या तो यह है कि हिंदुओं और मुसलमानों के बीच भाई-चारा नहीं है । यहाँ तक कि धर्मनिरपेक्ष कहलानेवाले लोग भी मुसलमानों को पृथक जमात मानकर ही विचार करते हैं । निश्चित ही उनके वोट-बैंक के लिए उन्हें खुश करने का तरीका अपनाया है । अन्य लोग भी उन्हें मानते तो अलग ही हैं, किंतु चाहते यह हैं कि उनके पृथक अस्तित्व को समाप्त कर उन्हें एकरूप कर दिया जाए । तुष्टिकरण करनेवालों और एकरूपता लानेवालों में कोई मौलिक अंतर नहीं है । दोनों ही मुसलमानों को पृथक और बेमेल मानते हैं ।

मेरा दृष्टिकोण पूर्णत: भिन्न है । जब तक मुसलमान इस देश और यहाँ की संस्कृति से प्यार करता है, उसका अपनी जीवन-पद्धति के अनुसार चलना स्वागत योग्य है । मेरा निश्चित मत है कि मुसलमानों को राजनीति खेलनेवालों ने खराब किया है । कांग्रेस ही है, जिसने केरल में मुस्लिम लीग को पुनर्जीवित कर देश-भर में मुस्लिम सांप्रदायिकता को बढ़ावा दिया है ।

श्री मलकानी: इन्हीं तर्कों के आधार पर क्या यह नहीं कहा जा सकता कि हिंदू आ कोड का निर्माण किया जाना भी अनावश्यक और अवांछनीय है ?

श्री गुरुजी: मैं निश्चित रूप से मानता हूँ कि हिंदू- कोड राष्ट्रीय एकता और एकसूत्रता की दृष्टि से पूर्णत: अनावश्यक है । युगों से अपने यहाँ असंख्य संहिताएँ रही हैं, किंतु उनके कारण कोई हानि नहीं हुई । अभी-अभी तक केरल में मातृसत्तात्मक पद्धति थी । उसमें कौन सी बुराई थी ? प्राचीन और आधुनिक सभी विधि-शास्त्री इस बात पर एकमत हैं कि कानूनों की अपेक्षा रूढ़ियाँ अधिक प्रभावी होती हैं, और यही होना भी चाहिए । ‘शास्त्राद् रूढ़िर्बलियसी’ शास्त्रों ने कहा है कि रूढ़ियाँ शास्त्रों से प्रभावी हुआ करती हैं तथा रीतियाँ स्थानीय या समूह की हुआ करती हैं । स्थानीय रीति-रिवाजों या संहिताओं को सभी समाजों द्वारा मान्यता प्रदान की गई है ।

श्री मलकानी: यदि समान नागरिक कानून जरूरी नहीं है, तो फिर समान दंड-विधान की भी क्या आवश्यकता है?

श्री गुरुजी: इन दोनों में एक अंतर है । नागरिक संहिता का संबंध व्यक्ति एवं उसके परिवार से है । जबकि दंड-विधान का संबंध न्याय, व्यवस्ता तथा अन्य असंख्य बातों से है । उसका संबंध न केवल व्यक्ति से है, अपितु बृहद् रूप में वह समाज से भी संबंधित है ।

श्री मलकानी: अपनी मुस्लिम बहने को पर्दे में बनाए रखना और बहुविवाह का शिकार होने देना क्या योग्य है ?

श्री गुरुजी: मुस्लिम प्रथाओं के प्रति आपकी आपत्ति यदि मानवीय कल्याण के व्यापक आधार पर हो तब तो, वह उचित है । ऐसे मामलों में सुधारवादी दृष्टिकोण ठीक ही है । परंतु यांत्रिक ढंग से कानून के बाह्य उपचारों द्वारा समानता लाने का दृष्टिकोण रखना ठीक नहीं होगा । मुसलमान स्वयं ही अपने पुराने नियम-कानूनों में सुधार करें । वे यदि इस निष्कर्ष पर पहुँचते हैं कि बहुविवाह-प्रथा उनके लिए अच्छी नहीं है, तो मुझे प्रसन्नता होगी । किंतु अपना मत मैं उनपर लादना नहीं चाहूँगा ।

श्री मलकानी: तब तो यह एक गहन दार्शनिक प्रश्न बनता प्रतीत होता है ?

श्री गुरुजी: निश्चित ही यह ऐसा है । मेरा मत है कि एकरूपता राष्ट्रों के विनाश की सूचना है । प्रकृति एकरूपता स्विकार नहीं करती । मैं, विविध जीवन-पद्धतियों के संरक्षण के पक्ष में हूँ । फिर भी ध्यान इस बात का रहना चाहिए कि ये विविधताएँ राष्ट्र की एकता में सहायक हों । वे राष्ट्रीय एकता के मार्ग में रोडा़ न बनें ।

श्री गुरुजी समग्र
खंड ९: १९५,१९६,१९७, १९८
डा. हेडगेवार स्मारक समिति
डा. हेडगेवार भवन
महाल,
नागपुर – ४४००३२

இந்தியாவுக்குப் பொருந்தாத இந்து கோட்பில்களும் பொது சிவில் சட்டமும்…

இந்தியாவில் ஆண் பெண் ஆகிய இருபாலரது வாழ்க்கை முழுவதையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடியும் தமக்கான சிவில் சட்டங்களை கொண்டு இன்றளவும் திகழ்கின்றன. அதாவது அக்குடியின் படி வாழக்கைக் கண்ணோட்டம், அதன்வழியே பிறப்பு முதல் இறப்பு வரை படிநிலைகள், எந்த நிலையில் என்ன நடக்க வேண்டும், அதற்கான வரம்புகள், பொறுப்புகள், கடமைகள், எழும் சிக்கல்களுக்கான தீர்வுகள் என அனைத்தையும் கொண்டு திகழ்கின்றன.

ஆனால் இவற்றை ஒரு குடியில் பிறக்கும் குழந்தைகள் அறிந்து கொண்டு விடாத படிக்கு பிரிக்க செய்யப்பட்ட ஏற்பாடே பள்ளிக் கல்வி முறை. பள்ளிக்கு அப்பாலும் பள்ளிகளின் வாயிலாக தரப்படும் கல்வியை சொல்லித்தர நிச்சயமாக பல வழிகளில் முடியும்.

இதில் தந்தை வழி சமூகங்களும் உள்ளன. தாய் வழிச் சமூகங்களுக்கும் உள்ளன. இவையிரண்டுமே இருபாலரது முழு வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு ஏற்பட்டவையாக உள்ளன.

மைசூர் மகாராஜா குடும்பம், திருவனந்தபுரம் அரச குடும்பம் அதன்படியே நாயர்கள் என்று நமதருகே எழும் தாய் வழிச் சமூக மரபுகள், துளு மக்களுக்கு (பன்ட், பில்லவா முதலிய குடிகள்) பூதாள பாண்டியன் ஏற்படுத்திய தாய்வழி ஆலியசந்தான மரபு என நீண்டு, மேகாலயாவில் காசி எனப்படும் குடியின் வாழ்க்கை முறை என்று விரிகிறது. இவை ஒன்றுக்கொன்றும் கூட பல வேறுபாடுகளை கொண்டுள்ளன.

இப்படி எண்ணற்ற வாழ்க்கை முறைகளை ஆயிரமாயிராம் ஆண்டுகளாக கொண்டு திகழும் இந்நாட்டுக்கு ஆணுக்கும் பயன்படாது பெண்ணுக்கும் பயன்படாது யாருக்கும் பயன்படாது இவை எல்லாவற்றையும் நாசமாக்கும் நோக்குடன், யாருடைய முழு வாழக்கைக்கும் உதவாத ஒரு உருப்படாத முறையை திணித்தவை தான் இந்து கோட் பில்கள்.

ஒரு உண்மயான இந்துத்வ அரசென்பது மேற்படி அனைத்து இந்துக் குடிகளுக்கும் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை மீட்டெடுத்துக் கொள்ள ஆவண செய்ய வேண்டுமே அன்றி அதை சுத்தமாய் துடைத்தெறியும் வண்ணம் பொது சிவில் சட்டமென்று முன்மொழிவது, பாரம்பரியம் பாரம்பரியம் என்று பேசுவோரைக் கொண்டே இந்நாட்டின் பண்பாட்டை கொலை செய்தவற்கு விரித்த வலையில் இந்துக்கள் சிக்கிக் கொண்டுவிட்டனர் என்பதைக் காட்டுவதாகும். தற்கொலைக்குச் சமமாகும்.

பெண்ணியம் பேட்ரியார்ச்சி என்று பேசும் இருபாலருக்குமே கூட தேவைப்பட்டால் மேற்படி தாய்வழி சமுதாயங்கள் எவ்வாறு வாழக்கை முழுவதையும் எடுத்துக் கொண்டு தீர்வுகளை அளிக்கின்றன என்று ஆராய்ந்து அவ்வழி போல் தமது வழிமுறையை அமைத்துக் கொள்ளலாம். அது இல்லையென்றால் புதிய தனி வழி ஏற்படுத்தி வாழ்ந்து கொள்ளலாம்.  ஆனால் அனைவரது வழியையும் அரசாங்கத்தை லாபி செய்து மாற்றும் உரிமை கிடையாது.

மாற்றுக் கருத்துக்களை மதிப்பதென்பது பல விசயங்களில் இணங்குகின்ற குடிகள் ஒருவருக்கொருவர் முரண்படுகிற விசயங்களில் அவரவர் அவரவர் போக்கில் அடுத்தவர் போக்கில் குறுக்கிடாது வாழ்ந்து கொண்டும் ஒருத்தரை மற்றொருவர் பொறுத்துக் கொள்வதுமே ஆகும்.