Even modern laws permit anomalies – Polygamy shall be permitted..

 

It has been said that in some States polygamy has been prohibited by law while in others it still continues and it is considered necessary to enact the law to remove this anomaly. Apart from the fact that the Hindu Law, by making custom source of law, recognises such anomaly, our present-day laws also permit such anomaly to exist in different parts of the country.

The constitution itself recognises the possibility and even the necessity of having different laws in different States on all the Subjects included in the State List and the concurrent List of its seventh schedule.

I do not consider that it is more anomalous for a man to go free and unhindered in one State and to be liable to be convicted in another State for having two wives at a time than for him to go about equally freely in one State and liable to be convicted in another State for possessing a bottle of liquor.

I have not heard of any proposal to establish uniformity of law and abolish this anomaly by prohibiting the possession of liquor in all States by Central legislation as is sought to be done in the case of polygamy.

Dr. Rajendra Prasad,

Letter to Nehru dated 15/09/1951.

Pilgrimage to freedom,

Page: 580.

Custom is one of the primary sources of Hindu Law…

Excerpts from Dr. Rajendra Prasad’s rebuttal to Nehru’s inclination to force Hindu Code Bills on Hindus…

The Hindu Law, as I understand it, gives the greatest latitude for changes to be introduced. Unlike the personal laws of any other community it recognises custom as one of the primary sources of law and it is well known that in course of time and according to the convenience, growth or progress of the Hindu community the law under the sanction of custom has been radically changed in different regions, sometimes in direct contravention of the texts of the shrutis and the smritis which are supposed or said to be the original sources of law by the Hindus.

We can watch and see almost from day to day how changes are taking place and if one casts even a cursory glance on what the Hindu society was even during our boyhood and compares it with what it is today, one cannot fail to be struck by the tremendous changes that have come about without any legislation and are legalized under the sanction of custom which is ever changing and ever growing.

I, therefore, do not see the necessity for hurried legislation to affect only the Hindu Society and no others although the latter may be enjoying or suffering from the effects of same or similar provisions in the personal law.

Dr. Rajendra Prasad,

In his Letter to Jawaharlal Nehru, 15/09/1951, New Delhi.

Pilgrimage to Freedom – Page 579.

அரசாங்கம் சிவில் சட்டம் வகுக்கிறேன் என்று வாழ்க்கை வழிமுறைகளில் குறுக்கிடுவது கண்டு ரோஷம் பிறக்க வேண்டாமா?

ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது?

பிரிட்டிஷ் அரசு திருமண வயது செட் செய்த சம்பவத்தோடு ஒப்பிட்டு அப்படி இன்று செய்ய யார் இருக்கிறார் என பரமாச்சாரியார்..

இருந்தாலும் முன்பெல்லாம் சீர்திருத்த வாதங்களுக்கு எதிர் வாதம் செய்ய ஜனங்களுக்குத் தெரியாவிட்டாலுங்கூட, “இதுவரை பெரியவர்கள் எப்படிப் பண்ணி வந்திருக்கிறார்களோ அப்படியே போவோம்; புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்ற அபிப்ராயம் இருந்தது. அதனால்தான் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி இந்த கல்யாண வயசு reform விஷயமாக இரண்டு முறை கவுன்சிலில் மசோதா கொண்டு வந்தும் அது நிறைவேறவில்லை.

அப்புறம் தான் ஸார்தா என்பவர், இப்போது நாம் “சாரதா சட்டம்” என்று ஒரு அம்மாள் போட்ட சட்டம் மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிற இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்குக்கூட சரிக்குச் சமன் ஆதரவாக 50%, எதிர்தரப்பில் 50% என்றுதான் வோட் விழுந்தது. அந்த ஸந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் ஸர்க்காரானது, “காங்கிரஸ் கேட்கிற ஸ்வயராஜ்யத்தைத்தான் நாம் தரவில்லை; அவர்களுக்குத் திருப்தியாக, மதத்தைக் கெடுப்பதற்காவது ஸஹாயம் செய்யலாம்” என்று நினைத்து நாமினேட்டட் மெம்பரை வைத்து இந்த மசோதாவுக்கு ஆதரவாக வோட் பண்ணச்சொல்லி, விவாஹ வயதை உயர்த்தியேயாக வேண்டும் என்பதைச் சட்டமாகச் செய்து விட்டார்கள். அதாவது public opinion (பொது ஜன அபிப்ராயம்) -ஐ மீறி கவர்மென்ட் பலத்தினாலே அந்த மசோதா ‘பாஸ்’ ஆயிற்று.

இப்போது நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது பழைய பழக்கங்களில் பக்தி விச்வாஸம் போய்விட்டது. பிரிட்டிஷ் ராஜ்யத்தில் சாரதாச் சட்டம் அமுலானவுடன், அவர்கள் கொடுத்திருந்த மஹாமஹோபாத்யாய டைட்டிலை “வேண்டாம்” என்று துறந்த பண்டிதர்கள் உண்டு. வங்காளத்திலிருந்த பஞ்சாணன தர்க்க ரத்ன பட்டாசார்யரும், திருவிசநல்லூரிலிருந்து காசிக்குப் போய் ஸெட்டில் ஆகிவிட்ட லக்ஷ்மண சாஸ்திரி (தமிழ்நாட்டு பிராம்மணர் என்று தெரிவதற்காக ‘லக்ஷ்மண சாஸ்திரி திராவிட்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்) என்பவரும் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தார்கள்.

இப்போது நம் ஸ்வதந்திர இந்தியாவில் ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து இப்படிக் குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது?

தெய்வத்தின் குரல்.

தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..

ஹிந்து வாழ்க்கை முறைகளை குலைக்கும் வகையில் சட்டம் போடுவதை சாடும் பரமாச்சாரியார்…

Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். ‘மதச்சார்பில்லாதது’ என்று இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில் ஸர்க்கார் தலையிடலாமே தவிர, மத (religious) விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய மதத்திலே இப்படி மதம்-சமூகம் -வீடு-தனி மனுஷ்யன் என்று தனித்தனியாகப் பிரிக்காமல், எல்லாவற்றையும் சேர்த்துப் பின்னி integrate பண்ணி [ஒருங்கிணைத்து] அல்லவா வைத்திருக்கிறது? அதனால் சமூக விஷயம் என்று ஸர்க்கார் போடுகிற சட்டமும் மதத்தையே அல்லவா பாதிக்கிறது? இதை ஒப்புக்கொள்ளாமல் ‘இன்னின்ன விஷயங்களோடு மதம் முடிந்துவிடுகிறது; மற்றதெல்லாம் ராஜாங்கம் ஸம்பந்தப்பட்ட ஸமூஹ விஷயம்’ என்கிறார்கள்.

சரி, எல்லா மதத்திலுமே சில அம்சங்களிலாவது ஸமூஹ ஸமாசாரங்களும் வந்து விடுகிறதே, அவற்றின் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால்- இங்கே தான் ரொம்ப வேதனையாயிருக்கிறது. ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் எல்லா மதமும் ஸமம் என்று சொன்னாலும், சிறுபான்மை மதஸ்தர்கள் social reform சட்டங்களை ஆக்ஷேபித்து, “இது எங்கள் மதத்தில் சொன்னதற்கு விரோதமாயிருக்கிறது. இது குரானுக்கு விரோதம்;கிறிஸ்துவக் கோட்பாட்டுக்கு முரணானது” என்று சொன்னால் உடனே அந்த மதஸ்தர்கள் விஷயத்தில் இந்தச் சட்டங்களுக்கு விலக்கு தந்துவிடுகிறார்கள். இம்மாதிரிச் சிறுபான்மை மதஸ்தருக்கு மட்டும் குடும்பக்கட்டுப்பாடு போன்ற ஒன்றில் விலக்குத் தந்தால் எதிர்காலத்தில் அவர்களே பெரும்பான்மையாகி விடவும் இடமேற்படுகிறது. ஆனால் ‘ஸெக்யூலர் ஸ்டேட்’ டாக இருந்தும் ஹிந்து மத விஷயமாக மட்டும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. ‘மைனாரிட்டி ரிலிஜன்’காரர்கள் போல் நம்மிலே ஒரு சூடு பிறந்து ஆட்சேபிக்கிறவர்களே இல்லை. அப்படியே நாலு, பேர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பிற்போக்குக்காரர்கள், பத்தாம் பசலிகள் (obscurantist) என்று அவர்களுக்குப் பெயர் கொடுத்துவிட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

‘ஸெக்யூலர் ஸ்டேட்’ என்றால் மதச் சார்பில்லாதஸர்க்கார் என்றே அர்த்தம். மத விரோதமான என்று அர்த்தமில்லை. ஒரு மதம் மட்டுமின்றி எல்லா மதமுமே அபிவிருத்தியாவது ஸெக்யூலர் ஸ்டேட்டுக்கு ஸம்மதமானதுதான்’ என்றெல்லாம் பெரிசாகப் பிரஸங்கம் பண்ணுபவர்கள் பண்ணினாலும், பிரத்யக்ஷத்தில் ஹிந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு விரோதமில்லாத காரியங்களைப் பண்ணுவதுதான் இங்கே ஸெக்யூலர் ஸ்டேட் என்று நடந்து வருகிறது! தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது.

தெய்வத்தின் குரல்

சர்வதர்மா வினா விடை

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக பொது சிவில் சட்டத்தின் அவசியமின்மை குறித்தும், அரசுக்கு இந்துக்களுக்கு சிவில் சட்டம் வகுக்க உரிமையில்லாதது பற்றியும் ஏற்கனவே வகுத்துவிட்ட இந்து கோட் பில்களை ரத்து செய்யவும் வேண்டி பலரோடு நிகழ்த்திய உரையாடல்களை தொகுத்து ஒரு நாற்பது பக்க ஏடாக வெளியிட இருக்கிறோம்.

நம்மோடு தொடர்ந்து இவ்விசயமாக இணைந்து பணியாற்றி வரும் திரு. காரத்திக் தியாகராஜன் இதன் இன்றியமையாமையை வலியுறுத்தி வருகிறார். யாரும் சர்வதர்மா என்றால் என்ன என்று அறிந்து கொள்ள நல்லதொரு எளிய அறிமுக நூலாக இது அமையவேண்டும்.

  1. சர்வதர்மாவின் நோக்கம் என்ன?

பரந்துபட்ட பாரத தேசத்தின் அனைத்து தொல்குடிகளும் வாழ்க்கை குறித்து அவரவர் கொண்டுள்ள கண்ணோட்டத்தின் அடிப்படையில் நெறிமுறைகளை அமைத்துக் கொண்டு வாழ மீண்டும் வழிவகை செய்வதற்கு தேவையான அனைத்து விதமான காரியங்களையும் மேற்கொள்வதே சர்வதர்மாவின் நோக்கமாகும்.